சபரிமலையில் 144 தடை உத்தரவு: மேலும் 3 நாட்களுக்கு நீட்டிப்பு

கேரளாவில் சபரிமலையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவு மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு பல அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகிறது. சபரிமலையின் அடிவாரத்தில் போராட்டம் நடத்தி வரும் அமைப்புகள், பெண்கள் கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுத்து வருகிறன்றனர்.

போராட்டம் நாளுக்கு நாள் வலுடைந்து வருவதால், சபரிமலை சுற்றியுள்ள மூன்று பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று முதல் நடை திறக்கப்பட்டதால் ஆந்திராவை சேர்ந்த பெண் செய்தியாளர் கவிதா மற்றும் சமூக ஆர்வலர் ரஹானா ஆகியோர் கோவிலுக்குள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் செல்ல முயன்றனர். ஆனால், போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து, இரண்டு பெண்களையும் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்நிலையில், போராட்டங்கள் தொடர்ந்து வருவதால் அசம்பாவிதங்கள் நடப்பதை தடுக்கும் வகையில் அமலில் உள்ள 144 தடை உத்தரவை நீட்டிக்குமாறு பத்தனம்திட்டா மாவட்ட காவல்துறை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இதையடுத்து, சபரிமலையை சுற்றியுள்ள பம்பை, நிலக்கல், சன்னிதானம் மற்றும் இலங்கவுல் பகுதிகளில் அமலில் உள்ள 144 தடை உத்தரவை மேலும் மூன்று நாட்களுக்கு நீட்டித்து பத்தனம்திட்டா மாவட்ட கலெக்டர் நூஹ் இன்று மாலை உத்தரவிட்டார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds