நிறைவடைந்தது பேட்ட படத்தின் ஷூட்டிங்: ரஜினி!

RajiniKanth Petta movie shooting over

by Mari S, Oct 19, 2018, 22:54 PM IST

பேட்ட படத்தின் ஷூட்டிங் 15 நாட்களுக்கு முன்னதாகவே முடிவடைந்ததாக ரஜினி தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், ரஜினி, விஜய்சேதுபதி, நவாசுதின் சித்திக், சசிகுமார், பாபிசிம்ஹா, சிம்ரன், த்ரிஷா என நட்சத்திர பட்டாளமே இணைந்துள்ள பேட்ட படத்தின் ஷூட்டிங் இவ்ளோ ஸ்பீடாக முடிந்து விட்டதா என ரஜினியையே ஆச்சர்ய படவைத்துள்ளார் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ்.

காலா படத்தை தொடர்ந்து தொடங்கப்பட்ட பேட்ட படத்தின் ஷூட்டிங் தற்போது முடிந்துள்ளது. நவம்பர் 29ம் தேதி 2.0 ரிலீசாகிறது. அப்படியென்றால், திட்டமிட்டபடி அடுத்த ஆண்டு பொங்கலுக்கு பேட்ட படம் அஜித்தின் விஸ்வாசம் படத்திற்கு போட்டியாக களமிறங்க வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது.

இத்தனை மல்டி ஸ்டார்கள் நடித்துள்ள ரஜினி படம், இவ்வளவு விரைவாக தனது படப்பிடிப்பை முடித்துள்ளது கார்த்திக் சுப்பராஜின் உழைப்பு மற்றும் சரியான கணிப்பையே காட்டுகிறது. படத்தின் படப்பிடிப்பு 15 நாட்களுக்கு முன்னரே முடிந்து விட்டது என ரஜினி தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும், அனைவருக்கும் விஜயதசமி வாழ்த்துகளையும் கூறியுள்ளார்.

You'r reading நிறைவடைந்தது பேட்ட படத்தின் ஷூட்டிங்: ரஜினி! Originally posted on The Subeditor Tamil

More Cinema News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை