நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலால் 542 பேர் பலி: மத்திய அமைச்சகம்

542 killed in swine flu across the country Union Ministry

by Isaivaani, Oct 23, 2018, 22:21 PM IST

நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சல் பாதிப்பால் இதுவரை 542 பேர் பலியாகி உள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பன்றிக்காய்ச்சலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் பன்றிக்காய்ச்சல், டெங்கு வேகமாக பரவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், எச்1என்1 வைரஸ் காய்ச்சல் பாதிப்பு குறித்த விபரங்களை தினமும் அனுப்பி வைக்க மத்திய சுகாதாரத்துறை மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.

அந்த வகையில், பன்றிக்காய்ச்சலால் பதிக்கப்பட்டுள்ள மற்றும் உயிரிழந்தோரின் விவரங்கள் குறித்து மாநில அரசுகள் மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தன.

அதன்படி, நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலால் இதுவரை 542 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

You'r reading நாடு முழுவதும் பன்றிக்காய்ச்சலால் 542 பேர் பலி: மத்திய அமைச்சகம் Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை