108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் போராட்டம் ?

தீபாவளி போனசை உயர்த்தாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம் போராட்டத்தில் ஈடுபடபோவதாக 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்கள் அறிவித்துள்ளனர்.

கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏராளமான பொது மக்கள் மனுவுடன் கலந்துக்கொண்டனர். பிறகு, கூட்டத்திற்கு வந்த மாவட்ட கலெக்டர் அன்பழகன், பொது மக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார்.

அப்போது, கரூர் மாவட்டம் கடவூர் தாலுகா முள்ளிப்பாடி கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் தங்களது நில பத்திரங்களை எடுத்து வந்து கலெக்டரிடன் மனு கொடுத்தனர்.

அந்த மனுவை கூறப்பட்டுள்ளதாவது: கடவூர் ஜமீனிடமிருந்து கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு எங்களுக்கு நிலம் வழங்கப்பட்டது. அதனை அனுபவித்து வந்த நிலையில், தற்போது கிராம கணக்கில் நிலஉச்சவரம்பு புஞ்சை நிலமாக தவறுதலாக உள்ளது. இதனை ரத்து செய்து விட்டு எங்களது கிரயபத்திரத்தின் அடிப்படையில் கணினியில் ஏற்றிவிட்டு மனைபட்டா மாற்றம் செய்து தர வழிவகை செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

குளித்தலையை சேர்ந்த மாட்டுவண்டி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் திரண்டு வந்து கொடுத்த மனுவில், குளித்தலை காவிரி ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டிருப்பதால் கடந்த 40 ஆண்டுகளாக எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மணல் அள்ள உரிய அனுமதி வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

லாலாபேட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் நாகராஜன் கொடுத்த மனுவில், கரூர் மாவட்டம் கள்ளப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தினமும் 300-க்கும் மேற்பட்ட நோயாளிகள் சிகிச்சைக்காக வருகின்றனர். எனவே இங்கு போதிய படுக்கை வசதி உள்ளிட்டவற்றை ஏற்படுத்தி தர வேண்டும் என்று கூறியிருந்தார்.

கரூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் சிலர் தங்களுக்கு பணிக்கொடை நீண்ட நாட்களாக வழங்கப்படாதது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.

தமிழ்நாடு 108 அவசர ஊர்தி தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் கொடுத்த மனுவில், 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர்களுக்கு தீபாவளி போனசை உயர்த்தி வழங்க வேண்டும். இந்த கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை எனில் வருகிற நவம்பர் மாதம் 5-ந் தேதி இரவு 8 மணிக்கு தொடங்கி 6-ந் தேதி இரவு 8 மணி வரை வேலைநிறுத்த போராட்டம் நடத்துவோம். அதன்பிறகும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
chennai-businesswoman-reeta-lankalingam-commits-suicide
சென்னையில் பெண் தொழிலதிபர் தற்கொலை?
Army-officer-shot-dead-by-army-man-in-Chennai-military-quarters
சென்னையில் பயங்கரம் : ராணுவ ஹவில்தாரை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்த வீரர்
boxer-swims-2.5-km-in-flood-water-to-attend-event-and-finally-wins-silver-medal
தலைக்கு மேல் வெள்ளம்... 2.5 கி.மீ. எதிர் நீச்சல்.. குத்துச்சண்டையில் பதக்கம்.. இளம் வீரரின் துணிச்சல்
Mettur-dam-will-be-opened-tomorrow-for-delta-irrigation
மேட்டூர் அணை நாளை திறப்பு ; தமிழக அரசு உத்தரவு
3-lakhs-cusecs-water-release-in-cauvery-river-Mettur-dam-level-increased
மேட்டூர் அணை ஒரே நாளில் 15 அடி உயர்வு; கர்நாடக அணைகளில் நீர் திறப்பு திடீர் நிறுத்தம்
Mumbai-hotel-charged-their-guest-Rs-1700-for-2-boiled-eggs
இரண்டு அவிச்ச முட்டை விலை 1700 ரூபாயாம்: மும்பை ஓட்டலில்தான்...
Groom-murder-to-his-father
கல்யாண மொய் பிரிப்பதில் தகராறு..! தந்தையை அடித்துக்கொன்ற புதுமாப்பிள்ளை
Rowdy-vallarasu-killed-police-encounter-at-Chennai-Madhavaram
சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை
Hindu-Religious-and-Charitable-Endowments-Department-conduct-a-study-in-sathuragiri-temple
உணவு கிடைக்கவில்லை எனப் புகார் - சதுரகிரியில் ஆய்வு செய்யும் அறநிலையத்துறை அதிகாரிகள்
3-persons-arrested-for-jewelery-worth-Rs-11-crore-robbery-in-toll-gate
சுங்க சாவடியில் ரூ.11 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை சம்பவத்தில் 3 பேர் கைது
Tag Clouds