மேட்டூர் அணை ஒரே நாளில் 15 அடி உயர்வு கர்நாடக அணைகளில் நீர் திறப்பு திடீர் நிறுத்தம்

கர்நாடக அணைகளில் இருந்து அதிக நீர் திறக்கப்பட்டதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்து 82.62 அடியாக உயர்ந்துள்ளது. இன்றும் நீர்வரத்து கூடுதலாக இருப்பதால் இன்று மாலைக்குள் 100 அடியை எட்டும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந் நிலையில், கர்நாடகாவில் கனமழை ஓய்வு எடுத்ததால் அணைகளில் நீர் திறப்பதும் நிறுத்தப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் 5 நாட்களுக்கும் மேலாக கனமழை கொட்டித்தீர்த்தது. அந்த மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்கள் வெள்ளத்தில் தத்தளிக்க, அணைகள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. இதனால் தமிழகத்துக்கு காவிரியில் திறக்கப்படும் நீரின் அளவும் கடந்த 4 நாட்களாக படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நேற்றிரவு 3 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் வரலாறு காணாத அளவுக்கு காவிரியில் வெள்ளமாக பெருக்கெடுத்து நீர் சீறிப் பாய்ந்து வருகிறது.

இந்த நீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்த நிலையில் அணையின் நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது. நேற்று 67 அடியாக இருந்த நிலையில், ஒரே நாளில் 15 உயர்ந்து இன்று காலை 82.62 அடியாக உயர்ந்துள்ளது.

அணைக்கு வரும் நீரின் அளவும் 1.15 லட்சம் கனஅடியில் இருந்து 1.65 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர் இருப்பு 44.61 டிஎம்சி.,யாக உள்ளது. இன்றும் நீர் வரத்து அதிகரிக்கும் என்பதால் இன்று மாலைக்குள் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நேற்றிரவு 3 லட்சம் கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளதால் அந்த நீர் வந்து சேரும் பட்சத்தில் நாளை இரவுக்குள் அணை முழு கொள்ளளவான 120 அடியை எட்டவும் வாய்ப்புள்ளது.

இந்நிலையில் கர்நாடகாவில் கடந்த சில நாட்களாக கொட்டித்தீர்த்த கனமழை, நேற்று மாலை ஓய்வெடுத்துள்ளது. இதனால் கர்நாடக மாநில அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரியில் திறந்து விடப்படும் நீர் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனாலும் நேற்று இரவு வரை கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் திறக்கப்பட்ட 3 லட்சம் கனஅடி நீர் இன்னும் 3 நாட்கள் வரை மேட்டூருக்கு வந்து கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பிலிகுண்டுலுவுக்கு வரும் நீரின் அளவு 1.85 கன அடியாக உள்ளது.

அதிக நீர் வரத்தான் எதிர்பார்த்ததை விட மேட்டூர் அணை முன்கூட்டியே நிரம்பும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் அணையில் உபரி நீரை திறந்து வீணாக கடலில் கலப்பதை தடுக்க, டெல்டா பாசனத்திற்காக உடனே தண்ணீரை திறந்து விட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
chennai-businesswoman-reeta-lankalingam-commits-suicide
சென்னையில் பெண் தொழிலதிபர் தற்கொலை?
Army-officer-shot-dead-by-army-man-in-Chennai-military-quarters
சென்னையில் பயங்கரம் : ராணுவ ஹவில்தாரை சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்த வீரர்
boxer-swims-2.5-km-in-flood-water-to-attend-event-and-finally-wins-silver-medal
தலைக்கு மேல் வெள்ளம்... 2.5 கி.மீ. எதிர் நீச்சல்.. குத்துச்சண்டையில் பதக்கம்.. இளம் வீரரின் துணிச்சல்
Mettur-dam-will-be-opened-tomorrow-for-delta-irrigation
மேட்டூர் அணை நாளை திறப்பு ; தமிழக அரசு உத்தரவு
3-lakhs-cusecs-water-release-in-cauvery-river-Mettur-dam-level-increased
மேட்டூர் அணை ஒரே நாளில் 15 அடி உயர்வு; கர்நாடக அணைகளில் நீர் திறப்பு திடீர் நிறுத்தம்
Mumbai-hotel-charged-their-guest-Rs-1700-for-2-boiled-eggs
இரண்டு அவிச்ச முட்டை விலை 1700 ரூபாயாம்: மும்பை ஓட்டலில்தான்...
Groom-murder-to-his-father
கல்யாண மொய் பிரிப்பதில் தகராறு..! தந்தையை அடித்துக்கொன்ற புதுமாப்பிள்ளை
Rowdy-vallarasu-killed-police-encounter-at-Chennai-Madhavaram
சென்னையில் பிரபல ரவுடி என்கவுன்டரில் சுட்டுக் கொலை
Hindu-Religious-and-Charitable-Endowments-Department-conduct-a-study-in-sathuragiri-temple
உணவு கிடைக்கவில்லை எனப் புகார் - சதுரகிரியில் ஆய்வு செய்யும் அறநிலையத்துறை அதிகாரிகள்
3-persons-arrested-for-jewelery-worth-Rs-11-crore-robbery-in-toll-gate
சுங்க சாவடியில் ரூ.11 கோடி மதிப்பிலான நகைகள் கொள்ளை சம்பவத்தில் 3 பேர் கைது
Tag Clouds