அமிர்தசரஸ் குண்டு வெடிப்பில் 3 பேர் பலி

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் பகுதியில் இன்று ஏற்பட்ட பயங்கர குண்டு வெடிப்பில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பஞ்சாப் மாநிலம், அமிர்தசரஸ் பகுதி அதிவாலா கிராமத்தில் இருக்கும் நிரன்காரி பவன் கட்டிடத்தில் இன்று மத நிகழ்ச்சி ஒன்று கோலாகலமாக நடைபெற்றது.

சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்ட இந்நிகழ்ச்சியின்போது, மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் சிலர் கட்டிடத்தின் மீது வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பினர்.

இந்த வெடிகுண்டுகள் வெடித்துச் சதறியதில் நிகழ்ச்சியில் இருந்த மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில், மூத்த காவல்துறை அதிகாரி சுரேந்தர் பால் சிங்க் பார்மர் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த குண்டு வெடிப்பில் படுகாயமடைந்த 10 பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், மர்ம நபர்கள் முகத்தை மறைத்தபடி பைக்கில் வந்து வெடிகுண்டுகளை வீசிவிட்டு தப்பியதாக விசாரணையில் தெரியவந்தது.

மேலும், குண்டு வெடிப்புக்கு காரணமாக மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெடிகுண்டு சம்பவம் குறித்து கேள்விப்பட்ட பஞ்சாப் மாநில முதல்வர் அம்ரீந்தர் சிங் இரங்கலை தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds