ரொம்ப காஸ்ட்லி ரேட்.... கறிக்காக நாய்களை கடத்தும் நாகாலாந்துவாசிகள்!

சென்னையில் 1,000 கிலோ நாய்கறி பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான தகவல்கள் பிரியாணி பிரியர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. நாய்கறியை முன்வைத்து சமூக வலைதளங்களில் மீம்ஸ்கள் ரெக்கை கட்டி பறக்கின்றன. ஆனால் நாகாலாந்து மாநிலத்தில் மீன், ஆடு, மாட்டு கறிகளை விட நாய்கறி வகை உணவுகள் அதிகமான விலைக்கு விற்கப்படுகின்றன. இதனால் அண்டை மாநிலங்களில் இருந்து நாய்களை கடத்தும் சம்பவங்களும் அவ்வப்போது நடைபெறுகின்றன என்பது சுவாரசியமான செய்தி.

நாகாலாந்தின் அண்டை மாநில போலீசாருக்கு அவ்வப்போது பெரும் தலைவலியாக இருப்பது ‘நாய்’ கடத்தல் கும்பல்தான். குறிப்பாக அஸ்ஸாமில் இருந்து தெருவில் திரியும் நாய்களை நாகாலாந்துக்கு கடத்தும் சம்பவங்கள்தான் அதிகரித்திருக்கின்றன.

நாகாலாந்து தலைநகர் கோஹிமா மற்றும் திமாப்பூர் நகரங்களில் நாய்கறி விற்பனைக்கு என தனி சந்தைகள் இயங்கி வருகின்றன. நாம் ஆடுகளை வெட்டும் லாவகம் வேறு.. ஆனால் நாகாலாந்துவாசிகள் நாய்களை பிடிக்கும் போதே கொடூரத்தைக் காட்டி விடுகின்றனர்.

நாய்களை கம்பிகள், கயிறுகளால் கட்டித்தான் சந்தைக்கு கொண்டு வருகின்றனர். சாக்குகளில் நாய்களை அடைத்து கொடூரமாக தாக்கி மரணிக்க வைக்கின்றனர்.

பின்னர் அவற்றை தீயில் வாட்டி அப்படியே விற்பனைக்கு தொங்க விடுகின்றனர். அந்த மக்களைப் பொறுத்தவரையில் நாய்கறி என்பதுதான் அதிக விலையானது; சமூக அந்தஸ்துக்கும் உரியது.

டெல்லியில் தெருவில் இருந்த நாய்களை நாகாலாந்து மாணவர்கள் கடத்திக் கொண்டு போய் கறிசமைத்த சம்பவமும் கூட அரங்கேறியது. ஆனால் நாய்கறி உண்பது உடலுக்கு கேடு; ஆகையால் நாய்கறி உண்பதை தடை செய்ய வேண்டும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

அம்மாநில அரசும் கடந்த சில ஆண்டுகளாக இது குறித்து பரிசீலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நாய்கறி திருவிழா

இதேபோல் சீனாவில் ஆண்டுதோறும் 10 நாட்கள் நாய்கறி திருவிழா நடத்தப்படுகிறது. இந்த நாய்கறி திருவிழாவுக்கு தடை விதிக்க வேண்டும் என உலகின் பல நாடுகளைச் சேர்ந்த பிராணிகள் நல சங்கங்கள் போர்க்கொடி தூக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds