கஜா புயல்: நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
Gaja Storm school and college of four counties holiday today
கஜா புயல் தாக்கத்தில் இருந்து மக்களின் இயல்பு வாழ்க்கை இன்னும் திரும்பாத நிலையில், நாகை உள்பட நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கஜா புயல் கரையை கடந்து 5 நாட்கள் ஆன நிலையிலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் இன்னும் முடங்கிக் கிடக்கிறது. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
புயல் பாதித்த பகுதிகளில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவதால் நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, திருவாரூர் மாவட்டத்தில் இன்று அனைத்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரத்தில் மழை பெய்து வருவதால், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடுத்து அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
You'r reading கஜா புயல்: நான்கு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News