மட்டன் உணவை திலீப்புக்கு கொடுத்த கைதி சாப்பிட மறுத்த திலீப்!

dileep missed mutton food in jail

Jul 16, 2017, 08:49 AM IST

நடிகையை கடத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு ஆலுவா சிறையில் அடைக்கப்பட்டுள்ள நடிகர் திலீப் ரூ.400 கோடி சொத்துக்கு அதிபதி. இருந்தாலும் சிறைக்குச் சென்றால் களி தின்றுதானே ஆக வேண்டும். ஆலுவா சிறையில் 2ம் எண் அறையில் திலீப் அடைக்கப்பட்டுள்ளார். சிறையை பொறுத்த வரை, மாலை 5.30 மணிக்கே உணவு வழங்கப்பட்டு விடும். நடிகர் திலீப்போ, மாலை 5.35 மணிக்குத்தான் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளார். சனிக்கிழமை டின்னர் மட்டன் உணவு வழங்கப்படும். அதனால், திலீப்புக்கு உணவு கிடைக்கவில்லை.

சிறையில் நடிகர் திலீப்

அறையில் அவருடன் அடைக்கப்பட்டிருந்த சக கைதி, தன் உணவை திலீப்புக்கு கொடுத்தார். ஆனால்,திலீப் அதை உண்ண மறுத்து விட்டார். மிகுந்த சோகத்தில் இருக்கும் திலீப் யாருடனும் பேசுவதில்லை. அமைதியாக இருக்கிறார். இரவு நேரத்தில் உறக்கம் இல்லாமல் தவிக்கிறார். திலீப்புக்கு அங்கமாலி நீதிமன்றம் ஜாமீன் தர மறுத்து விட்டது. கொச்சியில் உள்ள கேரள உயர்நீதிமன்றத்தை அணுகுமாற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You'r reading மட்டன் உணவை திலீப்புக்கு கொடுத்த கைதி சாப்பிட மறுத்த திலீப்! Originally posted on The Subeditor Tamil

More India News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை