ராஜஸ்தான் உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள்: தெறிக்கவிட்ட காங்.- கதறும் பாஜக!

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உட்பட 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வருகிறது. பெரும் எதிர்பார்ப்புகளுடன் இருந்த பாஜக தோல்வியை தழுவி வருகிறது.

மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டமன்ற தேர்தலை தலைமை தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 12ம் தேதி தொடங்கி கடந்த 7ம் தேதியுடன் நடத்தி முடித்தது.

சத்தீஸ்கர் மாநில தேர்தல் கடந்த மாதம் 12 மற்றும் 20ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில், 73 சதவீதம் வாக்குகள் பதிவானது. அடுத்ததாக, மத்திய பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் கடந்த நவம்பர் 28ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது.

தொடர்ந்து, ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் கடந்த 7ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்ததுபோல், 5 மாநிலங்களிலும் ஒரேகட்டமாக இன்று பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், முதல்கட்டமாக தபால் ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதைதொடர்ந்து, மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. இதன் மூலம், ஒவ்வொரு மாநிலங்களிலும் முன்னிலை நிலவரங்கள் வெளியாகத் தொடங்கியுள்ளன.

இதன் முதற்கட்ட முடிவில், காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி, மத்திய பிரதேசத்தில் ஆளும் பாஜக 81தொகுதிகளிலும், காங்கிரஸ் 97 தொகுதிகளிலும் முன்னிலை பெற்று வருகிறது.

இதேபோல், ராஜஸ்தானிலும் பாஜக தோல்வியை சந்தித்து வருகிறது. ஆளுங்கட்சியான ராஜஸ்தானில் பாஜக 66 தொகுதிகளிலும், எதிர்கட்சியான காங்கிரஸ் 98 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்து வருகிறது.

இதேபோல், சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் 48 தொகுதிகளில் வென்று முன்னிலையில் உள்ளது. பாஜக 27 தொகுதிகளில் வென்று பின்னடைவை சந்தித்து வருகிறது.
தெலுங்கானாவில் டிஆர்எஸ் 80 தொகுதிகளிலும், காங்கிரஸ் 27 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
corona-infection-confirmed-8-lions-hyderabad-zoo
இந்தியாவில் முதன்முறையாக 8 சிங்கங்களுக்கு கொரோனா!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
bihar-extends-lockdown-until-may-2021
பீகாரில் மே 15 வரை ஊரடங்கு நீட்டிப்பு.. மந்திரி நிதிஷ்குமார் அறிவிப்பு..
rahul-gandhi-says-to-put-lockdown-all-over-india
கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அவசியம்.. ராகுல் காந்தி அறிவிக்கை..
dont-do-ct-scan-says-by-aiims-director
லேசான அறிகுறி இருந்தால் சி.டி ஸ்கேன் செய்ய தேவையில்லை.. எய்ம்ஸ் இயக்குனர் தகவல்..
sonu-sood-gets-critically-ill-covid-patient-airlifted
விமான ஆம்புலன்ஸ் அனுப்பி கொரோனா நோயாளியின் உயிரை மீட்ட சோனுசூட்!
Tag Clouds