எஸ்.பிக்கு ஆர்டர் போட்ட போலி ஐ.ஏ.எஸ் கைது!

காவல் கண்காணிப்பாளரிடம், தன்னை ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று அறிமுகம் செய்து, தனக்கு வேண்டிய வேலையை உடனடியாக முடித்துக் கொடுக்கும்படி கட்டளை பிறப்பித்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

தலைநகர் டெல்லியின் அருகே உள்ள பகுதி கௌதம புத்தர் நகர். இப்பகுதியில் ஊரக காவல் கண்காணிப்பாளராக பணியில் இருப்பவர் வினீத் ஜெய்ஸ்வால். வினீத் ஜெய்ஸ்வாலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒரு நபர், தாம் ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரி என்று அறிமுகம் செய்து கொண்டார். பின்னர், தமக்கு வேண்டியவர்களுக்கு ஒரு வேலை நடக்க வேண்டும் என்றும் அதை உடனடியாக நடத்தி தர வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும் மேலும் அழுத்தம் கொடுத்ததால், எஸ்.பிக்கு அந்த நபர்மேல் சந்தேகம் ஏற்பட்டது. அந்த தொலைபேசி எண்ணை கண்காணிக்கும்படி எஸ்.பி. உத்தரவிட்டார். கண்காணிக்கப்பட்டதில் அந்த எண் காஸியாபாத் பகுதியை சேர்ந்தது என்பது தெரிய வந்தது. காவல் கண்காணிப்பாளரின் உத்தரவை தொடர்ந்து நொய்டா பெருநகரத்தின் பாதல்பூர் காவல் நிலையத்தை சேர்ந்த காவலர்கள் அந்த எண்ணுக்குரிய நபரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையின்போது, திரிபுரா மாநிலத்தில் பணியாற்றும் தமது தூரத்து உறவினரான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரின் பெயரையும், பதவியையும் பயன்படுத்தி இதுபோன்ற உத்தரவுகளை பிறப்பித்து காரியங்களை சாதித்துள்ளதாகவும், உறவினர்களுக்கு நண்பர்களுக்கு உதவுவதற்காக மட்டுமே தாம் இப்படி செய்ததாகவும், இதன் மூலம் பணம் எதுவும் சம்பாதிக்கவில்லையென்றும் அந்த நபர் கூறியுள்ளார்.

மோசடியில் ஈடுபட்ட அந்த நபரின் பெயர் மணி தியாகி என்றும், முப்பது வயதுக்குள்ளான வாலிபரான அவர் பி.ஏ. பட்டம் பெற்றிருப்பதாகவும் தனியார் நிறுவனமொன்றில் மேற்பார்வையாளராக பணியாற்றுவதாக கூறுவதாகவும், அவர் கூறிய தகவல்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லையென்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds

READ MORE ABOUT :