அமராவதி ஆற்றில் சட்டவிரோதமாக சாயக்கழிவுகள் கலப்பு : அதிகாரிகள் ஆய்வு

கரூர் அமராவதி ஆற்றில் சாயக்கழிவு மற்றும் கழிவுகள் கலக்கல் படுவதால் நீராதாரம் பாதிக்கப்பட்டு சுகாதாரக்கேடு ஏற்படுவதாகப் பல ஆண்டுகளாகவே புகார் சொல்லப்பட்டு வந்தது. இதை தொடர்ந்து சமீபத்தில் மதுரை உயர் நீதிமன்றம் தாமாக முன் வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டுள்ளது.கரூர் அமராவதி ஆற்றில் சட்ட விரோதமாகச் சாயக்கழிவு மற்றும் கழிவுகள் கலக்கப்படுவதால், ஆறு மாசடைகிறது. நோய் உருவாவதற்கு நாமே காரணமாக இருக்கிறோம்.

அமராவதி ஆற்றில் சாயக்கழிவு கலக்க வருபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை. டன் கணக்கில் பணத்தைப் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படவில்லையா? எனக் கடுமையான கேள்விகளை எழுப்பிய மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள், அமராவதி ஆற்றில் கலக்கப்படும் சாயக்கழிவுகள் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், தலைமைச் செயலர் மற்றும் உள்துறை செயலாளருக்குச் சம்மன் அனுப்ப நேரிடும் என மதுரை உயர் நீதிமன்றம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது.

இதையடுத்து,கரூர் அமராவதி ஆற்றில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய இணை இயக்குனர் மதிவாணன் தலைமையில், பொதுப்பணித்துறை மற்றும் கரூர் நகராட்சி அதிகாரிகள் இன்று கால்வாய்களில் வரும் தண்ணீரை ஆய்வுக்காகச் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement

READ MORE ABOUT :