சாரதா சிட்பண்ட் வழக்கில் முன்னாள் கமிஷனருக்கு ஐகோர்ட் முன்ஜாமீன்..

சாரதா சிட்பண்ட் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கொல்கத்தா முன்னாள் போலீஸ் கமிஷனருக்கு கொல்கத்தா ஐகோர்ட் முன் ஜாமீன் அளித்துள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெறுகிறது. அங்கு சாரதா சிட்பண்ட்ஸ் நிறுவனத்தில் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடுகள் நடந்ததாக சி.பி.ஐ. வழக்குபதிவு செய்து விசாரித்து வருகிறது. இந்த முறைகேடுகளில் மம்தாவின் உறவினர்கள் மற்றும் திரிணாமுல் கட்சியின் முக்கியப் பிரமுகர்களுக்கு தொடர்பிருப்பதாக குற்்றம்சாட்டப்பட்டிருக்கிறது. சிலர் இது தொடர்பாக கைதாகியுள்ளனர்.

இந்நிலையில், இந்த மோசடி வழக்குகளில் ஆவணங்களை திருத்தம் செய்து திரிணாமுல் கட்சியினரை காப்பாற்ற அப்போதைய கொல்கத்தா போலீஸ் கமிஷனர் ராஜீவ்குமார் முயன்றதாக சிபிஐ குற்றம்சாட்டியது. இதற்காக அவரிடம் விசாரணை நடத்துவதற்கு கொல்கத்தாவுக்கு சிபிஐ படை சென்றது. அப்போது அவர்கள் போலீஸ் கமிஷனரிடம் விசாரிக்க அனுமதிக்காமல் மம்தா பானர்ஜி போராட்டம் நடத்தினார்.

இதன்பின், சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, ராஜீவ்குமாருக்கு சம்மன் அனுப்பி, ஷில்லாங்கில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இந்நிலையில், கொல்கத்தா ஐகோர்ட் இன்று(அக்.1) ராஜீவ்குமாருக்கு முன் ஜாமீன் வழங்கியது. சிபிஐ அதிகாரிகள் அவரிடம் விசாரிக்க விரும்பினால், 48 மணி நேரத்திற்கு முன்பாக அவருக்கு சம்மன் அனுப்ப வேண்டும் என்றும், அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

தற்போது ராஜீவ் குமார், மேற்கு வங்க குற்றப்புலனாய்வுத் துறையில் பணியாற்றி வருகிறார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
sourav-ganguly-meets-west-bengal-governor
அரசியல் என்ட்ரி.. பாஜக முதல்வர் வேட்பாளர்... மேற்குவங்க ஆளுநரை கங்குலி சந்தித்தது ஏன்?!
bengal-governor-mamata-banerjee-swap-stinkers-over-citizenship-protests
மேற்குவங்க சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிக்கை கேட்ட கவர்னர்.. தண்ணி காட்டிய மம்தா..
mamata-banerjee-retreats-on-npr
தேசிய குடிமக்கள் பதிவேடு பணிகளை நிறுத்தியது மம்தா அரசு..
mamata-banerjee-hold-rally-in-kolkata-against-citizenship-law-amid-protests-across-the-state
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து கொல்கத்தாவில் பிரமாண்ட பேரணி.. எனது ஆட்சியை கலைத்து பாருங்கள்.. பாஜகவுக்கு மம்தா சவால்..
dri-seized-42-kg-of-smuggled-gold-during-raid-in-raipur-kolkata-and-mumbai
மத்திய வருவாய் துறை ரெய்டு.. 42 கிலோ தங்கம் சிக்கியது..
money-thrown-out-of-sixth-floor-office-in-kolkata-during-dri-raid
கொல்கத்தாவில் பணமழை.. ரூ.2000 நோட்டுகள் பறந்தன.. ரெய்டு நடந்ததால் வீசியடிப்பு
ex-kolkata-top-cop-gets-protection-from-arrest-in-saradha-chit-fund-scam
சாரதா சிட்பண்ட் வழக்கில் முன்னாள் கமிஷனருக்கு ஐகோர்ட் முன்ஜாமீன்..
india-will-stop-being-india-if-protests-stop-says-mamata-banerjee-on-jadavpur-university-fracas
போராட்டங்களை நிறுத்தினால் இந்தியாவே இருக்காது.. மம்தா பானர்ஜி ஆவேசம்
mamata-banerjee-runs-into-pm-modis-wife-before-boarding-flight-to-meet-him
பிரதமரின் மனைவியுடன் மம்தா திடீர் சந்திப்பு..
Tag Clouds