திமுகவுடனான காங்கிரஸ் தொகுதி உடன்பாடு முடிவானது - நாளை சென்னையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

Dmk-cong alliance finalised in Delhi

by Nagaraj, Feb 19, 2019, 21:08 PM IST

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் திமுக - காங்கிரஸ் தொகுதி உடன்பாடு ஏற்பட்டது. நாளை சென்னை அண்ணா அறிவாலயத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, பாஜக தங்களுக்கான தொகுதி உடன்பாட்டை இறுதி செய்து விட்டனர். இந்நிலையில் டெல்லியில் திமுக-காங்கிரஸ் இடையேயான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையும் இன்று விறுவிறுப்பாக நடந்து முடிந்தள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் திமுக சார்பில் கனிமொழி எம்பியும், தமிழக காங்கிரஸ் தரப்பில் கே.எஸ் அழகிரி உள்ளிட்ட தொகுதிப் பங்கீட்டுக் குழுவினரும் பேச்சு நடத்தினர்.

சுமார் 2 மணி நேரத்திற்கும் மேல் நீடித்த பேச்சுவார்த்தையின் முடிவில் காங்கிரசுக்கான தொகுதிகள் முடிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறுகையில், காங்கிரஸ் - திமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் எதிர்பார்த்த தொகுதிகள் கிடைத்ததில் மகிழ்ச்சி.

தொகுதிப் பங்கீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சென்னை அறிவாலயத்தில் இரு கட்சித் தலைவர்கள் முன்னிலையில் அறிவிக்கப்படும் என்று கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

You'r reading திமுகவுடனான காங்கிரஸ் தொகுதி உடன்பாடு முடிவானது - நாளை சென்னையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு! Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை