4 தொகுதி இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு

Assembly by-election, Naam tamilar katchi candidates announced

by Nagaraj, Apr 24, 2019, 13:50 PM IST

திருப்பரங்குன்றம் உள்ளிட்ட 4 சட்டப் பேரவை தொகுதிகளில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார்.

அடுத்த மாதம் 19-ந் தேதி திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலூர் ஆகிய சட்டப் பேரவைத் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் போட்டியிட பிரதான கட்சிகளான திமுக, அதிமுக, அமமுக ஆகிய கட்சிகள் ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துள்ளன.இந்நிலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் இந்த 4 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களின் பெயர்களை சீமான் அறிவித்துள்ளார்.

சூலூர்                   : வழக்கறிஞர் வெ.விஜயராகவன்
அரவக்குறிச்சி       : பா.க.செல்வம்
திருப்பரங்குன்றம் : இரா.ரேவதி
ஒட்டப்பிடாரம்      : அகல்யா

ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். நடந்த முடிந்த மக்களவைத் தேர்தல் மற்றும் 18 சட்டப்பேரவை இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியட்டு, பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி இருந்த சீமான், இந்த 4 தொகுதிகளிலும் அதையே பின்பற்றி 2 பெண் வேட்பாளர்களை களமிறக்கியுள்ளார்.

'எங்கள் சின்னம் மட்டுமே தெளிவாக இல்லை' – சீமான் குற்றச்சாட்டு

You'r reading 4 தொகுதி இடைத்தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு Originally posted on The Subeditor Tamil

More Politics News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை