குருவாயூரில் பிரதமர் மோடி தரிசனம் - எடைக்கு எடையாக தாமரை மலர்களை வைத்து வழிபாடு

கேரள மாநிலத்தில் உள்ள குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் பிரதமர் மோடி இன்று சாமி தரிசனம் செய்தார். தனது எடைக்கு எடையாக தாமரை மலர்களை துலாபாரம் கான்க்கையாக வழங்கி வழிபாடும் நடத்தினார் பிரதமர் மோடி.

இரண்டாவது முறையாக பிரதமராக மோடி பதவியேற்றதற்குப் பின் முதன் முறையாக தனது வெளிநாட்டு சுற்றுப் பயணத்தை இன்று தொடங்குகிறார். இன்று பிற்பகல் மாலத்தீவுக்கு செல்லவுள்ள பிரதமர் மோடி, நேற்று இரவு டில்லியில் இருந்து தனி விமானத்தில் கேரள மாநிலம் கொச்சி கடற்படை விமான தளத்துக்கு வந்தார்.

இன்று காலை ஹெலிகாப்டர் மூலம் குருவாயூர் சென்றார். அங்கு கிருஷ்ணர் கோவிலுக்கு சென்ற அவர் சுவாமி தரிசனம் செய்த பின், எடைக்கு எடையாக தாமரை மலர்களை துலாபாரம் காணிக்கையாக செலுத்தினார். கேரளாவின் பாரம்பர்யமான வெள்ளை வேஷ்டி, தோளில் துண்டு அணிந்தபடி சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கோவிலில் பிரதமர் மோடி தரிசனம் செய்தார். அப்போது பாதுகாப்பு காரணமாக, கோவிலில் பக்தர்கள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. பிரதமருடன் கேரள ஆளுநர் சதாசிவம் உடன் சென்றார்.

பிரதமராக மீண்டும் தேர்வு செய்ப்பட்ட மோடி முதன் முதலாக காசி விஸ்வநாதர் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினார். பிரதமர் பதவியேற்ற பின் முதன் முறையாக குருவாயூர் கோவிலில் தரிசனம் செய்த மோடி, இன்று பிற்பகல் ஆந்திர மாநிலம் திருப்பதி சென்று வழிபடுகிறார். பின்னர் அவர் மாலத்தீவு புறப்பட்டு செல்கிறார். நாளை இலங்கைக்கும் பிரதமர் மோடி பயணம் செய்ய உள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
guarantee-signature-required-mudra-loan-increase-to-20-lakhs-who-will-get-it
கியாரண்டி கையெழுத்தே தேவையில்... முத்ரா லோன்... 20 லட்சமாக உயர்வு... யார் யாருக்கு கிடைக்கும்?
a-trainee-ias-officer-a-thousand-lies-fortunately-people-escaped
ஒரு பயிற்சி ஐ.ஏ.எஸ் அதிகாரியும்... ஆயிரம் பொய்களும்... நல்ல வேளை மக்கள் தப்பிச்சாங்க!
students-who-did-not-wear-double-braids-teachers-who-took-scissors-in-hand-officials-who-suspended-them-in-action
இரட்டை ஜடை போடாத மாணவிகள்... கத்தரியை கையில் எடுத்த ஆசிரியர்கள்... அதிரடியாக சஸ்பெண்ட் செய்த அதிகாரிகள்
bir-mohammed-caught-in-pocso-panchayat-held-in-jamaat
போக்சோவில் சிக்கிய பீர் முகமது... ஜமாத்தில் நடந்த கட்டி வைத்து நடந்த பஞ்சாயத்து
gitari-film-actress-who-entered-wayanad-landslide
வயநாடு நிலச்சரிவு... பரபரவென களத்தில் இறங்கிய கிடாரி பட நடிகை... நீளும் உதவிக்கரங்கள்...
can-nirmala-sitharaman-be-mocked-turbulent-weather-in-coimbatore
தயாநிதி மாறனின் பிராமணர்கள் மொழி.. நிர்மலா சீதாராமனை கேலி செய்யலாமா? கோவையில் கொந்தளித்த வானதி
india-accounts-for-46-of-world-s-new-covid-19-cases-quarter-of-deaths
ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பில் 46% இந்தியாவில் பதிவாகியுள்ளது – உலக சுகாதார நிறுவனம்
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
woman-in-an-auto-rickshaw-carried-the-body-of-her-corona-dead-husband-in-uttar-pradesh
ஆம்புலன்சுக்கு அதிக பணம் கேட்டதால்.. கணவரின் சடலத்தை ஆட்டோவில் எடுத்துச் சென்ற மனைவி
Tag Clouds