ஆந்திராவில் துணை முதல்வர் அமர இருந்த மேடை சரிந்தது..! நன்றி அறிவிப்பு கூட்டத்தில் தள்ளுமுள்ளு
Andhra vijayanagaram stage collapse YSR congress
ஆந்திராவில் விஜயநகரம் மாவட்டம் கோகாபுரத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் சார்பில் நன்றி அறிவிப்பு கூட்டம் நடைபெற்றது.
இதில் மலைவாழ் மக்கள் நலத் துறை அமைச்சரும், துணை முதல்வருமான புஷ்பா ஸ்ரீவாணி பங்கேற்றார். இந்த விழா மேடையில் அதிக தொண்டர்கள் ஏறியதால் திடீரென மேடை சரிந்து விழுந்தது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அனைவரும் மேடையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இதில் அதிர்ஷ்டவசமாக யாரும் எந்தவித காயமின்றி தப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மேடைக்கு வெளியே நின்றபடி துணை முதல்வர் ஸ்ரீவாணி தொண்டர்கள் மத்தியில் பேசி விட்டு அங்கிருந்து புறப்பட்டார்.
You'r reading ஆந்திராவில் துணை முதல்வர் அமர இருந்த மேடை சரிந்தது..! நன்றி அறிவிப்பு கூட்டத்தில் தள்ளுமுள்ளு Originally posted on The Subeditor Tamil
More Politics News
READ MORE ABOUT :