30 ஆண்டுகளில் நடந்த மிக மோசமான தேர்தல் 64 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கண்டனம்

இந்தியாவில் கடந்த 30 ஆண்டுளில் நடந்த மிக மோசமான தேர்தல் என்று நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலை விமர்சித்து 64 முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளனர். அதில், 80க்கும் மேற்பட்ட பல்வேறு துறை சார்ந்தவர்களும் கையெழுத்திட்டுள்ளனர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது, தேர்தல் ஆணையம் முறையாக செயல்படவில்லை என்று கடுமையான குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன. தேர்தல் ஆணையத்தை பா.ஜ.க.வின் ஒரு அங்கமாக சித்தரித்து ஏராளமான மீம்ஸ் மற்றும் கார்ட்டூன்கள், கட்டுரைகள் வெளியாகின. ஆனால், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவுக்கு எதிராக இன்னொரு தேர்தல் ஆணையர் லவாசா நேரடியாக குற்றம்சாட்டினார். ஆனாலும், சுனில் அரோரா எந்த வகையிலும் அலட்டிக் கொள்ளவே இல்லை.

வாக்குப்பதிவு எந்திரத்தில் பா.ஜ.க. ஏதோ முறைகேடு செய்கிறது என்று கருதி, 21 முக்கிய எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்தன. அதாவது, 50 சதவீத ஒப்புகைச்சீட்டுகளை சரிபார்க்க வேண்டும் என்று கோரின. அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இதன்பின், அமித்ஷா சொன்னது போல் பா.ஜ.க. 300க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றது.

இந்நிலையில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் 64 பேர் தேர்தல் ஆணையத்திற்கு தற்போது ஒரு கடிதம் எழுதியுள்ளனர். அதில், ‘‘கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் நடந்த தேர்தல்களில் மிக மோசமான தேர்தல் இப்போது நடந்த நாடாளுமன்றத் தேர்தல்தான். தேர்தல் ஆணையத்தை குறை சொல்லக் கூடாது என்று நினைக்கும் முன்னாள் தேர்தல் ஆணையர்களே வேறு வழியின்றி பல முறைகேடுகளை சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது’’ என்று குறிப்பிட்டுள்ளனர். அதில், ‘‘ராணுவம் குறித்து பிரச்சாரத்தி்ல் பேசக் கூடாது என்று விதிமுறை இருந்தும், புலவாமா, பாலகோட் தாக்குதல்கள் குறித்து பேசிய பிரதமர் மோடிக்கு ஒரு நோட்டீஸ் கூட அனுப்பவில்லை.

பா.ஜ.க.வினரின் வெறுப்பூட்டும் பேச்சுகள், மதரீதியான பேச்சுகள் எதிலும் தேர்தல் ஆணையம் முறையாக செயல்படவில்லை. பிரதமரின் ஹெலிகாப்டரை சோதனை செய்த ஐ.ஏ.எஸ். அதிகாரி முகமது மோஷினை சஸ்பெண்ட் செய்தது தவறான முன்னுதாரணம்’’ என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளனர்.

இந்த கண்டனக் கடிதத்தில் முன்னாள் ராணுவ அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் 80க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்டுள்ளனர். இதனால், எதுவும் ஆகி விடப் போவதில்லை. ஆனால், இந்திய வரலாற்றில் இவை இடம் பெறும். குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான மோடி, அமித்ஷாவின் செயல்பாடுகள் வரலாற்றில் இடம்பெறும் என்பதையும் மறுக்க முடியாது.

ராஜ்யசபா எம்.பி. தேர்தல்... நாளை வேட்பு மனுதாக்கல்... அதிமுக, திமுகவில் அதிர்ஷ்டம் யாருக்கு?

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
Tag Clouds