காஷ்மீர் பிரச்னை எதிரொலி தமிழகம் முழுவதும் உஷார் 5 ஏடிஜிபி தலைமையில் கண்காணிப்பு

காஷ்மீருக்கு விசேஷ அந்தஸ்து அளிக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சட்டம் ஒழுங்கை கண்காணிக்க 5 ஏடிஜிபிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அரசியல் சட்டப்பிரிவு 370 ன் கீழ் ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு ரத்து செய்துள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாக அம்மாநிலம் பிரிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மாநிலங்களவையில் ஜம்மு-காஷ்மீர், லடாக் என பிரிப்பதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் 370 மற்றும் 35ஏ சட்டப்பிரிவை ரத்து செய்வதற்கான தீர்மானமும் நிறைவேறியது. மறுசீரமைப்பு மசோதாவிற்கு ஆதரவாக 125 வாக்குகளும் எதிராக 41 வாக்குகளும் பதிவாகின.

இதன் தொடர்ச்சியாக, நாடு முழுவதும் முக்கிய இடங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் காஷ்மீர் மசோதாவுக்கு எதிராக நடைபெறும் போராட்டங்கள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கண்காணிக்க காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மாநிலத்தின் ஐந்து மண்டலங்களுக்கும் தலா ஒரு ஏடிஜிபியை கண்காணி்ப்பு அதிகாரியாக நியமித்துள்ளார். இதன்படி, மேற்கு மண்டலம், கோவை, திருப்பூர் மற்றும் சேலம் மாநகருக்கு ஆயுதப்படை ஏடிஜிபி சங்கர் ஜிவால், மதுரை மாநகர் மற்றும் மதுரை, திண்டுக்கல் ராமநாதபுரம் சரகங்களுக்கு சிலைகடத்தல் தடுப்பு சிஐடி பிரிவு ஏடிஜிபி அபய்குமார் சிங், மத்திய மண்டலம் மற்றும் திருச்சி மாநகருக்கு ஏடிஜிபி சைலேஷ்குமார் யாதவ், வடக்கு மண்டலத்திற்கு ஏடிஜிபி தாமரைச் செல்வன், திருநெல்வேலி மற்றும் நெல்லை சரகத்திற்கு ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

பிரிவு 370 நீக்கம் எதிரொலி; காஷ்மீரில் ஊரடங்கு அமல்; ஸ்ரீநகரில் ராணுவம் குவிப்பு

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
covid-deaths-due-to-oxygen-shortage-no-less-than-genocide-says-allahabad-high-court
ஆக்ஸிஷஜன் இல்லாமல் இறப்பது இனப்படுகொலைக்கு ஒப்பானது – நீதிமன்றம் காட்டம்!
rahul-gandhi-slams-modi
ஆக்சிஜன் இல்லாமல் இறக்கிறார்கள் உங்களுக்கு வீடு கேக்குதா? – மோடியை சாடிய ராகுல்!
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
m-k-stalin-his-first-action
திமுகவிற்கு குடைச்சல் கொடுத்தவர்களுக்கு ஸ்டாலின் “செக்”!
how-kadampur-raju-win-against-ttv-dinakaran
டிடிவி தினகரன் கடம்பூர் ராஜுவிடம் ஏன் தோற்றார்?!
traffic-ramasamy-died-due-to-illness
சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி மரணம்!
pinarayi-son-in-law-will-get-a-chance-in-kerala-ministry
மருமகனுக்கு அமைச்சர் பதவி கொடுக்கும் பினராயி விஜயன்?!
Tag Clouds