குழந்தைகளுக்கு அதிக சத்து தரும் சத்து மாவு கூழ்..

Apr 18, 2018, 13:44 PM IST

குழந்தைகளுக்கு தரும் உணவுகளை இயற்கையான முறையில் தயாரிக்கவே பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகின்றனர். ஆனால் அதைப்பற்றிய விழிப்புணர்வு சமீபகாலமாக தான் மக்களிடையே பெருகி வருகிறது. இதற்கிடையே, டிவிகளில் வரும் ஹெல்த் ட்ரிங்க்ஸ்களை தான் குழதைகளுக்கு புகட்டுகின்றனர். மெல்ல மெல்ல விழிப்புணர்வு ஏற்பட்டு தற்போது மீண்டும் பழைய இயற்கையான நிலைக்கே திரும்ப முயன்று வருகின்றனர்.
அதனால், குழந்தைகளுக்கு நலம் தரும் சத்தான சத்து மாவு செய்வதை பற்றி கீழே பார்ப்போம்.

தேவையான பொருட்கள்

செய்முறை

1. ராகி, சோளம், கம்பு, பாசிப்பயறு, கொள்ளு ஆகியவற்றை தண்ணீரில் 12 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

2. தண்ணீரை நன்றாக வடித்த பின்னர் அதை ஒரு துணியில் கட்டி 12 மணி நேரம் கழித்து எடுத்தால், தானியங்கள் முளை விட்டு இருக்கும். அவற்றை 3 நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். மற்ற பொருட்களை ஒரு நாள் வெயிலில் காய வைக்க வேண்டும். அனைத்தையும் மொத்தமாக மாவு மில்லில் அரைத்து, 4 மணி நேரம் ஆற வைத்தால் சத்து மாவு தயார். 12 கிலோ மாவு கிடைக்கும்.

3. சத்து மாவு தயாரிக்க தேவையான பொருட்கள் மளிகைக் கடைகளில் கிடைக்கின்றன. தனியாக இடம் எதுவும் தேவையில்லை. வீட்டிலேயே தானியங்களை ஊற வைத்து, முளை கட்டலாம். வீட்டு வளாகத்தில் காய வைக்கலாம்.

4. தானியங்களை இந்த அளவு வீட்டு மிக்சியில் அரைத்தால் சரியாக வராது. மாவு மில்லில் கொடுத்து அரைக்க வேண்டும்.

You'r reading குழந்தைகளுக்கு அதிக சத்து தரும் சத்து மாவு கூழ்.. Originally posted on The Subeditor Tamil

More Ruchi corner News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை