பொற் கோவிலில் ஸ்ருதிஹாசன் வழிபாடு

பொற் கோவிலில் ஸ்ருதிஹாசன் வழிபாடு

Jul 24, 2017, 15:46 PM IST

மிர்தரசில் உள்ள பொற்கோவிலுக்கு நடிகை ஸ்ருதிஹாசன் சென்று வழிபட்டார்.

பொற்கோவிலில் ஸ்ருதி வழிபாடு

விளம்பரம் தொடர்பான நிகழ்வில் பங்கேற்க நடிகை ஸ்ருதிஹாசன் சண்டிகார் நகருக்கு சென்றிருந்தார். நிகழ்ச்சி முடிந்த அடுத்த நாள், அங்குள்ள சீக்கியர்களின் புனித ஸ்தலமான பொற்கோவிலுக்கு சென்று வழிபட்டார்.

பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், பொற்கோவிலுக்கு வர வேண்டுமென்பது எனக்கு சிறு வயது முதலே கனவு. இப்போதுதான் அதற்கான வாய்ப்பு கிடைத்தது. இங்குள்ள மக்கள் அன்பு நிறைந்தவர்கள் விருந்துபச்சாரத்தில் மிஞ்சியவர்கள். என் வாழ்க்கையில் இந்த அனுபவத்தை மறக்க முடியாது என்றார்.

பொற்கோவிலில் இரவு நேர வழிபாட்டில் கலந்து கொண்ட ஸ்ருதிஹாசன், அதன் முன்பு நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

You'r reading பொற் கோவிலில் ஸ்ருதிஹாசன் வழிபாடு Originally posted on The Subeditor Tamil

More Spirituality News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை