இலங்கை அதிபருக்கு மனநிலை பரிசோதனை – மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்

இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் மனநிலை தொடர்பான மருத்துவ பரிசோதனையை நடத்த உத்தரவிடக் கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்துள்ளது.

கடந்த அக்டோபர் 26ஆம் தேதிக்குப் பின்னர், இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன எடுத்த நடவடிக்கைகள் மற்றும் அவரது பேச்சுக்கள் என்பன, அவர் உறுதியான மனநிலையில் இருக்கிறாரா என்ற சந்தேகங்களை எழுப்பியிருந்தது.

இந்தநிலையில், அதிபர் மைத்திரிபால சிறிசேனவை, மருத்துவ சோதனைக்கு உட்படுத்தி, அவர் தெளிவான மனநிலையில் தான் இருக்கிறாரா என்பதை உறுதிப்படுத்த, பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, தக்சிலா லக்மாலி ஜெயவர்த்தன என்ற பெண், மேன்முறையீட்டு நீதிமன்றில் றிட் மனுவொன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை, விசாரிக்கும் அதிகாரம் மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கு இல்லை என்று, தள்ளுபடி செய்து உத்தவிட்ட நீதிமன்றம், ஒரு இலட்சம் ரூபாவை வழக்குச் செலவாக வழங்க வேண்டும் என்றும் மனுதாரரை பணித்துள்ளது,

 

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
gotabaya-rajapaksa-wins-sri-lanka-presidential-election
இலங்கை அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சே வெற்றி.. நாளை பதவியேற்பு
srilanka-President-srisena-determined-to-implement-death-penalty
போதைக் கடத்தலுக்கு மரண தண்டனை: சிறிசேனாவுக்கு ரணில் எதிர்ப்பு
Sri-Lanka-rise-again-rsquo---PM-Modi-pays-tribute-Easter-bombing-victims
இலங்கையில் குண்டுவெடிப்பு நடந்த தேவாலயத்தில் மோடி அஞ்சலி
People-questions-about-super-singer-juniors-6-show
இது அநியாயம்.. .சூப்பர் சிங்கர் ஜூனியர்ஸ் தீர்ப்புக்கு ரசிகர்கள் விமர்சனம் #VijayTv
Serial-bomb-blast-Colombo
இலங்கையில் ஈஸ்டர் கொண்டாட்டத்தில் பயங்கரம் : தேவாலயங்களில் தொடர் குண்டு வெடிப்பு - ஏராளமானோர் பலி
JVP-demands-Srilanka-not-to-sign-defense-agreements-with-the-US
அமெரிக்காவுடன் இலங்கை அதிபர், பிரதமர் ரகசிய பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்து: ஜேவிபி திடுக் தகவல்
Tamils-of-Sri-Lanka-observe-Lanka-rsquo-s-National-Day-as-Black-Day
இலங்கை சுதந்திர தினத்தை துக்க தினமாக கடைபிடித்த ஈழத் தமிழர்கள்!
Sri-Lankan-Navy-arrests-4-TN-fishermen
இலங்கை கடற்படையால் மீண்டும் 4 தமிழக மீனவர்கள் கைது
Srilanka-Speaker-accepts-Rajapaksa-as-opposition-leader
பதவி இழந்தார் இரா. சம்பந்தன் – எதிர்க்கட்சித் தலைவராக மகிந்த ராஜபக்ச!
Sirisena-appoints-Tamil-as-Northern-Province.Governor
வடக்கு மாகாண ஆளுநர் பதவிக்கு முதல்முறையாக தமிழரை நியமித்தார் சிறிசேன
Tag Clouds