78 ஆண்டு கனவு நிறைவேறுகிறது! தருமபுரி- மொரப்பூர் இடையே புதிய ரயில் பாதைக்கு மத்திய அரசு ஒப்புதல்!

Dharmapuri-Morappur railway line approved: Anbumani Ramadoss

by Mathivanan, Feb 5, 2019, 18:23 PM IST

தருமபுரி - மொரப்பூர் இடையே 36 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய ரயில் பாதை அமைக்க மத்திய ரயில்வே அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

இது தொடர்பாக தருமபுரி தொகுதி எம்.பி. டாக்டர் அன்புமணி ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

தருமபுரி - மொரப்பூர் இடையே 36 கிலோ மீட்டர் தொலைவுக்கு புதிய தொடர்வண்டிப்பாதை அமைக்க மத்திய தொடர்வண்டித்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இதைத் தொடர்ந்து இப்பாதைக்கான கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. தருமபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டு கனவு நிறைவேறியிருக்கிறது.

இவ்வாறு அன்புமணி பதிவிட்டுள்ளார்.

You'r reading 78 ஆண்டு கனவு நிறைவேறுகிறது! தருமபுரி- மொரப்பூர் இடையே புதிய ரயில் பாதைக்கு மத்திய அரசு ஒப்புதல்! Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை