மகாத்மா காந்தி ஒரு அயோக்கியப் பய.. எங்க அண்ணன் கோட்சே கொன்னாரு... திருபுவனத்தில் கொல்லப்பட்ட ராமலிங்கத்தின் சர்ச்சை பேச்சு வீடியோ வைரல்

Controversy over Thirupuvanam Ramalingam Murder #JusticeForRamalingam

by Mathivanan, Feb 7, 2019, 13:02 PM IST

திருபுவனத்தில் கொலை செய்யப்பட்ட ராமலிங்கம் இஸ்லாமியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அந்த வீடியோ பதிவின் முடிவில், மகாத்மா காந்தி ஒரு அயோக்கிய பய... எங்க அண்ணன் கோட்சேதான் அவரை சுட்டுக் கொன்னாரு என சர்ச்சைக்குரிய வகையில் பேசும் காட்சி இடம்பெற்றுள்ளது.

தஞ்சை அருகே திருபுவனத்தில் பாமக முன்னாள் நிர்வாகி ராமலிங்கம் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இஸ்லாமியர்கள் மதமாற்றம் செய்ய முயற்சித்ததாகவும் அதை தடுத்ததால் ராமலிங்கம் கொலை செய்யப்பட்டார் எனவும் பாஜக உள்ளிட்ட இந்துத்துவா அமைப்புகள் குற்றம்சாட்டி வருகின்றன.

இந்நிலையில் இஸ்லாமியர்களுடன் கொலை செய்யப்படுவதற்கு முன்னர் ராமலிங்கம் வாக்குவாதம் செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் இந்துத்துவா கருத்துகளை முன்வைத்து இஸ்லாமியர்களுடன் ராமலிங்கம் வாக்குவாதம் செய்கிறார்.

இதற்கு பதிலளிக்கும் இஸ்லாமிய பெரியவர் ஒருவர், யார் தீவிரவாதத்தை செய்வது? காந்தியை கொலை செய்தது யார்? என கேட்கிறார். அதற்கு ராமலிங்கம், காந்தி ஒரு அயோக்கிய பய.. எங்க அண்ணன் கோட்சேதான் அவரை கொலை செஞ்சாரு என பேசியிருக்கிறார்.

ஆனால் ராமலிங்கம், மகாத்மா காந்தி குறித்து பேசியதை எடிட் செய்துவிட்டு வாக்குவாத காட்சியை மட்டும் இந்துத்துவா அமைப்பினர் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

வீடியோ:

You'r reading மகாத்மா காந்தி ஒரு அயோக்கியப் பய.. எங்க அண்ணன் கோட்சே கொன்னாரு... திருபுவனத்தில் கொல்லப்பட்ட ராமலிங்கத்தின் சர்ச்சை பேச்சு வீடியோ வைரல் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை