மீண்டும் செல்போனை தட்டிவிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிவகுமார்

Actor Sivakumar again caught Mobile Controversy

by Mathivanan, Feb 7, 2019, 12:36 PM IST

பொதுநிகழ்ச்சியில் நடிகர் சிவகுமார் ரசிகர் ஒருவரின் செல்போனை மீண்டும் தட்டி விட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

மதுரையில் அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்ற நடிகர் சிவகுமார் தம்மை படம் எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை தட்டிவிட்டது பெரும் சர்ச்சையானது. இதைத் தொடர்ந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு சிவகுமார் வருத்தம் தெரிவித்தார்.

செல்போனை பறிகொடுத்த நபருக்கு புதிய செல்போன் வாங்கி கொடுத்து சர்ச்சைக்கு சிவகுமார் தரப்பு முற்றுப்புள்ளி வைத்தது. இன்று சென்னையில் மீண்டும் ரசிகர் ஒருவர் செல்பி எடுக்க முயன்றபோது அசால்ட்டாக அந்த போனை தட்டி விட்டு சிவகுமார் நடந்து செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

You'r reading மீண்டும் செல்போனை தட்டிவிட்டு சர்ச்சையில் சிக்கிய நடிகர் சிவகுமார் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை