சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கு விருப்ப மனு பெறுகிறது அதிமுக - 13-ந் தேதி ஒரு நாள் மட்டுமே அவகாசம்

Assembly by-election, admk announces wish petition date

by Nagaraj, Mar 11, 2019, 19:00 PM IST

18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிமுகவில் விருப்ப மனு வரும் 13-ந் தேதி பெறப்படும் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு ஏற்கனவே விருப்ப மனு பெறப்பட்டுள்ளது. எஞ்சிய தொகுதிகளில் போட்டியிட விரும்புவோர் நாளை மறுதினம் (13-ந் தேதி) விருப்ப மனுக்களை பெற்று அன்று மாலைக்குள்ளேயே பூர்த்தி செய்து ரு 25 ஆயிரம் கட்டணம் செலுத்தி ஒப்படைக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்களிடம் கடந்த மாதமே விருப்ப மனுக்களை பெற்று நேர்காணலும் நடத்தப்பட்டு வருகிறது. இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவேர்களிடம் 13-ந் தேதிக்குப் பின்னர் தனியாக நேர்காணல் நடத்தப்படும் என்று தெரிகிறது.

You'r reading சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்கு விருப்ப மனு பெறுகிறது அதிமுக - 13-ந் தேதி ஒரு நாள் மட்டுமே அவகாசம் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை