`அனைத்துக்கும் எங்களையே எதிர்பார்க்கக்கூடாது - டிக் டாக் ஆப்பை தடை செய்ய உத்தரவிட்ட நீதிமன்றம்

டிக்-டாக் ஆப்பை டவுன்லோடு செய்ய தடை விதிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த முத்துக்குமார் என்கிற வழக்கறிஞர் டிக் டாக் ஆப் பயன்பாட்டுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அதில் டிக் டாக் ஆப்க்கு பலரும் அடிமையாகி வருகின்றனர். இதனால் சமூக சீரழிவு நடந்து வருகிறது. பல ஆபாச வீடியோக்கள் இதில் வலம் வருகின்றன. இளைஞர்கள், மாணவர்கள் மட்டுமின்றி பொதுமக்களும் இதை பயன்படுத்துகிறார்கள். டிக்-டாக் ஆப்பை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளதாக கடந்த பிப்ரவரி மாதம் தமிழக சட்டசபையில் தெரிவிக்கப்பட்டது. பல விபரீத சம்பவங்கள் நடக்க, இந்த ஆப் காரணமாக அமைந்துள்ளது. அதனால் டிக் டாக் ஆப்பை தடை செய்ய வேண்டும் என மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், சுந்தர் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது . அப்போது பேசிய நீதிபதிகள், ``புளூவேல் உள்ளிட்ட சமூகத்துக்கு சீர் விளைவிக்கும் செயலிகளை நீதிமன்றம் தான் தலையிட்டு தடை செய்தது. தொடர்ந்து சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் விஷயங்களை தடை விதிக்க நீதிமன்றத்தையே மத்திய அரசு எதிர்பார்க்கக்கூடாது. டிக்-டாக் ஆப்பை டவுன்லோடு செய்ய இந்தோனேஷியா, வங்காளதேசம் ஆகிய நாடுகள் தடை விதித்துள்ளது. எனவே நம் நாட்டில் டிக்-டாக் ஆப்பை டவுன்லோடு செய்ய செய்ய மத்திய அரசு தடை விதிக்க வேண்டும். டிக்-டாக் செயலியை பயன்படுத்தி எடுக்கப்பட்ட வீடியோக்களை டி.வி. சேனல்கள் ஒளிபரப்பக் கூடாது. குழந்தைகளின் தனிநபர் சுதந்திரத்தை பாதுகாக்கும் இணையதள சட்டத்தை நம் நாட்டில் அமல்படுத்துவது குறித்து வருகிற 16-ந்தேதி மத்திய, மாநில அரசுகள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்“ என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds