அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் எதிர்க்கட்சி வேட்பாளர் செய்த சேட்டை வேடிக்கை பார்த்து சிரித்த மக்கள்
Opposite Party member seek vote from Minister Sellur Raju
மக்களவைத் தேர்தல் இன்னும் இரண்டு வாரங்களில் நடைபெற உள்ளதால், வேட்பாளர்கள் என்ன மாதிரியான யுக்திகளை கையாள்வது என்பது தெரியாமல் திணறி வருகின்றனர். திமுக கூட்டணியில் இருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் அனைத்திற்கும் ஒருபடி மேல் சென்று, அமைச்சர் செல்லூர் ராஜுவிடமே வாக்கு சேகரித்த சுவாரஸ்ய சம்பவம் அரங்கேறி உள்ளது.
மதுரையில் மு.க. அழகிரியின் ஆதிக்கம் இருப்பதால், அங்கு நேரடியாக களம் காண விரும்பாத திமுக, தனது கூட்டணி கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை மதுரை மக்களவைத் தொகுதியில் களமிறக்கி உள்ளது. எழுத்தாளர் எஸ். வெங்கடேசன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடுகிறார்.
இன்று காலை மதுரையில் உள்ள ஒரு பூங்காவில் நடைபயிற்சி செய்து கொண்டிருக்கும் மக்களை சந்தித்து வாக்குகளை சேகரித்து வந்த வெங்கடேசன், ஆளுங்கட்சியான அதிமுகவின் அமைச்சர் செல்லூர் ராஜூ அங்கு வருவதை பார்த்து, அவர் அருகே சென்று, தனக்கு வாக்களிக்க வேண்டுமென கோரியுள்ளார்.
இந்த சுவாரஸ்ய சம்பவத்தை கண்ட அங்கிருந்த பொதுமக்கள் ஆச்சர்யமடைந்தனர். செல்லூர் ராஜூ அரசியல் நாகரீகம் கருதி, சிரிப்புடன் அங்கிருந்து சென்றுள்ளார்.
தேர்தல் நெருங்க நெருங்க வேட்பாளர்கள் இன்னும் என்ன மாதிரி கூத்துக்களை எல்லாம் செய்யப் போகிறார்களோ தெரியவில்லை.
You'r reading அமைச்சர் செல்லூர் ராஜூவிடம் எதிர்க்கட்சி வேட்பாளர் செய்த சேட்டை வேடிக்கை பார்த்து சிரித்த மக்கள் Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News