ஜவுளிகடையில் கொள்ளையடித்த சிறுவன் உள்பட 5 பேர் கைது

சென்னையில் ஜவுளி கடையில் கொள்ளையடித்து சென்ற சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

தண்டையார்பேட்டை, வினோபா நகர், 7வது தெருவை சேர்ந்தவர் மோகன்குமார் (21). இவர் அதே பகுதியில் கும்மாளம்மன் கோயில் தெருவில் ஜவுளிக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடந்த வாரம் இவர் மதியம் வீட்டிற்கு சாப்பிட சென்றார். அந்த நேரத்தில், இவரது தம்பி விக்னேஷ் (18), என்பவர் வியாபாரத்தை கவனித்துக்கொண்டார். அப்போது பைக்கில் வந்த 5 பேர், ஆடை வாங்குவது போல் நடித்து, கடையில் யாரும் இல்லாத நேரத்தில், விக்னேஷை கத்தி முனையில் மிரட்டி சுமார் 20 பேன்ட், 25 சட்டை என 30 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள ஆடைகள் மற்றும் 10 ஆயிரம், 15 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள செல்போன் ஆகியவற்றை கொள்ளையடித்துக் கொண்டு, அங்கிருந்து தப்பிச்சென்றனர்.

இதுகுறித்து மோகன்குமார் தண்டையார்பேட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தனிப்படை அமைத்து கொள்ளையர்களை தேடிவந்தனர். மேலும் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை வைத்து ஆய்வு செய்தனர். அதில், கொள்ளையர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனத்தின் எண் பதிவாகி இருந்தது. அதை வைத்து விசாரணை நடத்தியதில், காசிமேடு பல்லவன் நகர் பகுதியை சேர்ந்த சூர்யா (27), புதுவண்ணாரப்பேட்டை வெங்கடேஸ்வரன் நகரை சேர்ந்த பிரகாஷ் (எ) தேசப்பன் (26), விமல் (23), சரண் (30) மற்றும் பல்லவன் நகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஆகிய 5 பேர் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரிந்தது. அவர்களை் நேற்று கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஒரு கத்தி, பைக், பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பின்னர், 5 பேரையும் ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 4 பேரை புழல் சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை கெல்லீஸ் சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

தாராபுரத்தில் ஓட்டுக்கு பணம் கொடுத்த சித்தாப்பாவை தாக்கிய அண்ணன் மகன்

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
young-woman-killed-for-refusing-to-have-sex-near-ulundurpet
ஆசைக்கு இணங்க மறுத்த பெண் - குத்தகைதாரர் வெறிச்செயல்
karnadaka-chain-snatching-on-road-by-bikers
கர்நாடகாவில் தடுபூசி போட்ட பெண்ணிற்கு நிகழ்ந்த கொடுமை!
12-year-old-girl-rape-by-20-year-old-neighbor
பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 12 வயது சிறுமி… மொட்டைமாடியில் வைத்து இளைஞர் வெறிச்செயல்...
illegal-affair-krishnagiri-the-temple-priest-who-killed-his-wife-was-arrested-in-krishnagiri
மனைவியுடன் உல்லாசமாக இருந்த உதவியாளர்…! கோயிலுக்கு அழைத்துச்சென்று அர்ச்சனை செய்த பூசாரி
17years-old-girl-raped-many-times
17வயது சிறுமியை 2 ஆண்டுகளாக பலாத்காரம் செய்த பலர் – உறைய வைக்கும் தகவல்கள்!
illegal-affair-on-the-wife-s-sister-cruelty-to-the-condemned-wife
மனைவியின் தங்கைக்கூட உறவு… கண்டித்த கர்ப்பிணி பெண்ணிற்கு நிகழ்ந்த கொடூரம்!
1-21-crore-fine-for-cut-down-two-trees
இரண்டு மரங்களை வெட்டியவருக்கு ரூ.1.21 கோடி அபாரதமாம்!
nellai-illegal-affair-viral-video
இளம் பெண்ணை வசியப்படுத்திய தண்ணி கேன் சப்ளேயர் : குடும்பத்தினர்கள் விபரீதம்..
Tag Clouds