கொலை செய்யத் தூண்டும் ஒரு தலைக்காதல்..! கோவையில் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து

Trying to kill the One side love

Jun 25, 2019, 09:30 AM IST

கோவை ஆர்.எஸ் புரம் பகுதியில் இயங்கி வரும் தனியார் கணினி பயிற்சி பள்ளி அருகே நேற்றுமாலை இளம்பெண் கத்தியால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமிர்தா என்பவரை சுரேஷ் கத்தியால் குத்தியுள்ளார்.

அவர் கத்தியால் குத்தும்போது அருகில் இருந்த சக மாணவர்கள் தடுத்துள்ளனர். இதை தொடர்ந்து அருகில் இருந்த பொதுமக்கள் சுரேசை சிறைபிடித்து போலிசாரிடம் ஒப்படைத்தனர். மேலும் மாணவி அமிர்தா மற்றும் சக மாணவர் இருவருக்கு அதிர்ஷ்டவசமாக லேலசான காயங்கள் ஏற்பட்டதின் அடிப்படையில் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து ஆர். எஸ் புரம் போலீசார் விசாரித்த போது, இருவரும் கேரளா மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்றும் கல்லூரி காலத்தில் காதலித்து வந்ததாகவும், காதலில் ஏற்பட்ட பிரச்சனையில் அமிர்தா சுரேசிடம் பழகுவதை தவிர்த்ததாகவும் தெரியவந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த சுரேஷ் நேற்று அமிர்தாவை கொலை செய்யும் நோக்கில் கத்தியில் குத்தியுள்ளார்.

இதேபோல் ஒருதலைக் காதலால் கடந்த வாரம் சென்னை சேத்துப்பட்டில் தேன்மொழி என்ற பெண்ணை சுரேந்தர் என்பவர் அரிவாளால் வெட்டிவிட்டு தற்கொலை செய்துகொண்டார். இப்படி நாளுக்கு நாள் ஒரு தலைக்காதலால் அதிகரிக்கும் கொலைகளையும், வன்மத்தையும் கட்டுப்படுத்த பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளித்தால் அதனை அலட்சியம் செய்யாமல், போலீஸார் உரிய நேரத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. 

-தமிழ் 

தேவையில்லாத சான்றிதழ்களை கேட்பது ஏன்...? நீட் தேர்ச்சி பெற்ற மாணவர்களை வடிகட்ட சதி - வைகோ பரபரப்பு குற்றச்சாட்டு

You'r reading கொலை செய்யத் தூண்டும் ஒரு தலைக்காதல்..! கோவையில் இளம்பெண்ணுக்கு கத்திக்குத்து Originally posted on The Subeditor Tamil

More Crime News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை