ஸ்டாலின் கொடுத்த ஒரு கோடி ரூபாய் வரல... - மாஃபா பாண்டியராஜன்

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கைக்கு திமுக அளித்த ஒரு கோடி ரூபாய் நிதி இன்னும் வந்து சேரவில்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

Feb 12, 2018, 09:12 AM IST

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழ் இருக்கைக்கு திமுக அளித்த ஒரு கோடி ரூபாய் நிதி இன்னும் வந்து சேரவில்லை என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறியுள்ளார்.

அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில், தமிழுக்கென தனி இருக்கை அமைப்பதற்கு நிதி திரட்டப்பட்டது. தமிழக அரசு சார்பில் ரூ. 10 கோடி வழங்கப்பட்டது. அதேபோல் திமுக தலைவர் கருணாநிதியின் சார்பில் 1 கோடி ரூபாய் வழங்குவது திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த நிலையில், திமுக அளித்த நிதி இன்னும் வந்து சேரவில்லை என அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து கூறியுள்ள அவர், "தமிழ் இருக்கைக்கு திமுக அளித்த நிதி இன்னும் வந்து சேரவில்லை. விரைவில் அந்த நிதி வந்து சேரும் என நினைக்கிறேன்.

பள்ளி மாணவர்களுக்கு அருங்காட்சியகம் என்பது வரலாற்று ஆய்வகம் போன்றது. மாணவர்களை தங்கள் பகுதியில் உள்ள அருங்காட்சியகத்துக்கு அழைத்து செல்வது அவசியம்" என்று தெரிவித்துள்ளார்.

திமுக நிதிக்கான காசோலை அளித்துவிட்ட நிலையில் அமைச்சர் பாண்டியராஜன் தற்போது இவ்வாறு கூறியுள்ளார்.

You'r reading ஸ்டாலின் கொடுத்த ஒரு கோடி ரூபாய் வரல... - மாஃபா பாண்டியராஜன் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை