வேலூர் நிலவரம்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி வாய்ப்பு பிரகாசம் 15 ஆயிரம் வாக்கு முன்னிலை

vellore lok sabha election kathir anand leading with highes volume

by Nagaraj, Aug 9, 2019, 13:05 PM IST

வேலூர் மக்களவைத் தொகுதிக்கு கடந்த 5-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. 3-வது சுற்று வரை முன்னணி நிலவரம் இழுபறியாக இருந்த நிலையில், 6-வது சுற்று முடிவில் அதிமுக வேட்பாளர் ஏ.சி.சண்முகம், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த்தை விட, 12,673 வாக்குகள் முன்னிலை பெற்றார். அதன் பின் 10-வது சுற்று முடிவில் ஏ.சி.சண்முகத்தை பின்னுக்குத் தள்ளி கதிர் ஆனந்த் 7500 வாக்குகள் முன்னிலை பெற்றிருந்த நிலையில் தற்போது 15 ஆயிரம் வாக்குகள் முன்னிலை வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளார்.

13-வது சுற்று முடிவில் முன்னணி நிலவரம் :

ஏ.சி.சண்முகம் (அதிமுக): 3,13,694

கதிர் ஆனந்த் (திமுக): 3, 28,615

தீபலட்சுமி (நாம் தமிழர்) : 15,708

இன்னும் சுமார் 4 லட்சம் வாக்குகள் எண்ண வேண்டிய நிலையில் வெற்றி பெறப்போவது யார்? என்பதை கணிக்க முடியாத அளவுக்கு வாக்கு எண்ணிக்கை நிலவரம் ஒவ்வொரு சுற்றிலும் இழுபறியாகி வந்தது. தற்போது கதிர் ஆனந்த் தொடர்ந்து முன்னிலை பெற்று வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கியுள்ளார்.

வேலூர் தேர்தல் முன்னணி நிலவரம் : முதல் சுற்றில் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்த் 1500 வாக்குகள் முன்னிலை

You'r reading வேலூர் நிலவரம்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி வாய்ப்பு பிரகாசம் 15 ஆயிரம் வாக்கு முன்னிலை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை