கப்பலில் ரஷ்யாவுக்கு வேலைக்கு போகலாம் : சென்னை-விளாடிவோஸ்டோக் பயணம்..

சென்னையில் இருந்து ரஷ்யாவின் கிழக்கு கடலோரப் பகுதியான விளாடிவோஸ்டோக் வரை கப்பல் விடுவதற்கு இந்தியாவும், ரஷ்யாவும் ஒப்பந்தம் செய்துள்ளன. மேலும், இந்திய தொழிலாளர்களை ரஷ்யாவுக்கு வேலைக்கு அனுப்புவதற்கும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2 நாட்களாக ரஷ்யாவில் சுற்றுப்பயணம் மேற் கொண்டிருந்தார். அப்போது அவர் ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் உள்ள விளாடிவோஸ்டோக் துறைமுக நகருக்கு சென்றிருந்தார். அங்கு ரஷ்ய அதிபர் புடினுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகம், பாதுகாப்பு, விண்வெளி, எண்ணெய்-எரிவாயு, அணுசக்தி உள்பட பல்வேறு துறைகளில் 15 ஒப்பந்தகள் கையெழுத்திடப்பட்டன.

அவற்றில் முக்கியமானது, சென்னையில் இருந்து விளாடிவோஸ்டோக் நகருக்கு கப்பல் சேவையை துவக்குவதற்கான ஒப்பந்தமாகும். இதன்படி, இரு துறைமுகங்களுக்கும் இடையே கடல்சார் தொடர்புகள் ஏற்படுத்தப்படும். மேலும், ரஷ்யாவுக்கு திறன்மிக்க இந்திய தொழிலாளர்களை வேலைக்கு அனுப்புவது தொடர்பாகவும் புடினுடன் மோடி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விஜய் கோகலே கூறுகையில், ரஷ்யாவுக்கு இந்திய தொழிலாளர்களை அனுப்புவதற்கான முயற்சிகளை பிரதமர் மோடி மேற்கொண்டுள்ள சூழ்நிலையில், சென்னை-விளாடிவோஸ்டோக் கப்பல் சேவை துவங்கப்படுவது மிக முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் என்றார்.

எனவே, ரஷ்யாவுக்கு வருங்காலத்தில் கப்பலில் பயணம் செய்யலாம். அத்துடன் வேலைக்கும் செல்லும் சூழல் ஏற்படும்.

விளாடிவோஸ்டோக் நகரில் இருந்து ஸ்வெஸ்டா கப்பல் கட்டும் தளத்திற்கு பிரதமர் மோடி சென்றார். ரஷ்ய அதிபர் புடினும், மோடியும் கப்பலில் பயணம் செய்து அங்கு சென்றனர். ஸ்வெஸ்டா கப்பல் கட்டும் தளம் மிக பிரம்மாண்டமானது. அதை மோடி பார்வையிட்டார். அப்போது, கப்பல் கட்டும் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளுடனும் அவர் கலந்துரையாடி விட்டு திரும்பினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds