சென்னையில் கனமழை.. மாநகராட்சி மந்தம்..

சென்னையில் கனமழை காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், குப்பைகள் அள்ளாமல் அவை சாலைகளில் வெள்ளநீருடன் சேர்ந்து துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

வங்க கடலில் மத்திய, மேற்கு பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதேபோல், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பல இடங்களில் இன்று அதிகாலை முதல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் கோயம்பேடு, கே.கே.நகர், கிண்டி, குரோம்பேட்டை, முடிச்சூர், எழும்பூர், புரசைவாக்கம், அண்ணாநகர், மாதவரம், சோழிங்கநல்லூர், அடையார் உள்பட பரவலாக பல இடங்களிலும் இன்று காலையில் மழை பெய்தது.

சென்னையில் பல இடங்களில் கடந்த சில நாட்களாக சரிவர குப்பைகளை அள்ளாமல், குப்பைத் தொட்டிகள் நிரம்பி வழிந்தன. அதனால், சாலைகளிலும் குப்பைகள் சிதறிக் கிடந்தன. நல்ல நாளிலேயே குப்பை அள்ளாத மாநகராட்சி ஊழியர்களும், அதை கண்காணிக்காமல் அலுவலகத்தில் அமர்ந்து அரசியல் பேசிக் கொண்டிருக்கும் அதிகாரிகளும் மழை நேரத்தில் ஓடி, ஓடி உழைக்கப் போகிறார்களா, என்ன?
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழையால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடி, சாலைகளில் இருந்த குப்பைகளையும் தள்ளிக் கொண்டு செல்வதை பார்க்க முடிகிறது.

சில பகுதிகளில் மட்டும் மழையிலும் குப்பைகள் அள்ளப்பட்டு வருகின்றன. இதையும் தாண்டி, கே.கே.நகர் உள்பட சில இடங்களில் பழைய கழிவுநீர் குழாய்களை அகற்றி விட்டு, புதிதாக பெரிய குழாய்களை பதிக்கும் பணிக்காக சாலையோரங்களில் பெரும் பள்ளம் தோண்டிப் போட்டு ஒரு வாரமாக மூடாமல் வைத்திருக்கிறார்கள். அதனால், சாலைகளில் வாகன போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இன்னொரு புறம், பள்ளங்களில் மழை நீர் தேங்கி, கொசுக்கள் உற்பத்தியும் அமோக நடைபெற்று வருகிறது. சில இடங்களில் மழை நீர் தேங்கியிருப்பதால், மின் விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. ஆக, மொத்தத்தில் சாதாரண மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.

சென்னையே இந்த லட்சணம் என்றால் திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் என்ன நிலைமை இருக்கும் என்பதையும் யூகிக்க முடிகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
remdesivir-sold-for-rs-1-8-crore-in-chennai-kelambakkam-center
உயிரை காக்க சென்னை கீழ்பாக்கத்தில் குவியும் மக்கள்! ஐந்தே நாட்களில் ரூ.1.88 கோடி!
17-year-old-girl-was-raped-by-many-for-2-years-like-pollachi-sexual-harassment-case
2 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்த 3 பேர்… தாம்பரத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…
corona-virus-150-districts-across-india-might-met-full-lockdown
சென்னை உட்பட நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?
non-loan-insurance-company-employe-abduction-police-looking-for-kidnappers
லோன் கொடுக்க மறுத்த இன்சூரன்ஸ் கம்பெனி ஊழியர் கடத்தல்
night-curfew-lasts-for-2-days-deserted-chennai
2 வது நாள் இரவு ஊரடங்கு - வெறிச்சோடிய சென்னை
all-chennai-local-train-service-after-10pm-cancelled
சென்னையில் மின்சார ரயில் இரவு 10 மணிக்கு மேல் ரத்து
a-girl-molested-by-church-paster-in-chennai
ஜெபம் செய்ய வந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர்.. அதிர்ச்சியில் பக்தர்கள்!
Tag Clouds