பிரதமருக்கு கடிதம் எழுதிய 49 பிரபலங்கள் மீது தேசத் ரோக வழக்கு..

நாட்டில் சிறுபான்மையினருக்கு எதிராக நடக்கும் வன்முறைகள் குறித்து பிரதமர் மோடிக்கு பகிரங்க கடிதம் எழுதிய டைரக்டர் மணிரத்னம், நடிகை ரேவதி உள்பட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் உள்பட சில மாநிலங்களில் முஸ்லிம்கள், தலித் மக்கள் உள்பட சிறுபான்மையினர் தாக்கப்படும் சம்பவங்கள் நடைபெற்றன. குறிப்பாக, இந்து அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், பசு பாதுகாப்பு என்ற பெயரில், மாட்டிறைச்சி உண்போரை கடுமையாக தாக்கிய செய்திகள் வெளியாகின. பிரதமர் மோடியும் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதத்தில் அடூர் கோபாலகிருஷ்ணன், டைரக்டர் மணிரத்னம், நடிகை ரேவதி, அபர்னா சென், அனுராக் காஸ்யப், வரலாற்று அறிஞர் ராமச்சந்திர குஹா உள்பட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 49 பிரபலங்கள் கையெழுத்திட்டு, பிரதமர் மோடிக்கு ஒரு பகிரங்கக் கடிதம் அனுப்பினர்.

அந்த கடிதத்தில் அவர்கள், நாட்டில் சிறுபான்மையினர் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்து வருவதாகவும், வன்முறைகளை ஏவியவர்கள் மீது சரியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர். மேலும், பிரதமர் மோடி, நாடாளுமன்றத்தில் பேசினால் போதாது, குற்றவாளிகளை கடுமையாக தண்டிக்க உத்தரவிட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தனர்.

இதைத் தொடர்ந்து, கங்கனாராவத், விவேக் அக்னிகோத்ரி உள்பட 62 பேர், அந்த 49 பேருக்கு பதிலளிக்கும் விதமாக பகிரங்க கடிதம் வெளியிட்டனர். அதில், அந்த 49 பேரும் வேண்டுமென்றே வெறுப்பூட்டும் வகையில் செயல்படுவதாகவும், பிரதமரின் மீது களங்கம் கற்பிப்பதாகவும் குற்றம்சாட்டியிருந்தனர்.

இந்நிலையில், பீகார் மாநிலம் முசாபர்நகரில் வக்கீல் சுதீர் ஓஜா என்பவர், தலைமை குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், பிரதமருக்கும், நாட்டிற்கும் களங்கம் கற்பிக்கும் வகையில் பகிரங்க கடிதம் வெளியிட்ட மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பேர் மீது இ.பி.கோ. சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் சூர்யகாந்த், இதை ஏற்று உத்தரவு பிறப்பித்தார். இதைத் தொடர்ந்து, முசாபர்நகரில் உள்ள சதார் போலீஸ் நிலையத்தில் ஒரு எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 ேபர் மீதும் தேசத் துரோகப் பிரிவிலும், இ.பி.கோ. பிரிவுகளின் கீழும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை வக்கீல் ஓஜா தெரிவித்துள்ளார். இந்த வழக்கின் விசாரணைக்கு விரைவில் 49 பேருக்கும் சம்மன் அனுப்பப்படும் என்று தெரிகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
Tag Clouds