அண்ணா நினைவு நாள்.. திமுக அமைதி பேரணி
அண்ணாவின் 51வது நினைவு நாளையொட்டி சென்னையில் திமுக சார்பில் அமைதிப் பேரணி நடைபெற்றது.
சேப்பாக்கம் விருந்தினர் மாளிகையில் இருந்து அண்ணா நினைவிடம் வரை நடைபெற்ற இந்த பேரணிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார். தி.மு.க பொருளாளர் துரைமுருகன், தலைமை நிலைய முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, இளைஞரணி செயலாளர் உதயநிதி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பேரணியின் முன் வரிசையில் சென்றனர். மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்கு பேரணி வந்தடைந்ததும், அங்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை மரியாதை செலுத்தினார். தொடர்ந்து மூத்த நிர்வாகிகளும் மலரஞ்சலி செலுத்தினர்.
இதன்பின்னர், மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
You'r reading அண்ணா நினைவு நாள்.. திமுக அமைதி பேரணி Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News