குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுகவின் இயக்கத்தில் கையெழுத்திட்ட மணமக்கள்..

by எஸ். எம். கணபதி, Feb 5, 2020, 13:46 PM IST

திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் திருமணம் செய்து கொண்ட மணமக்கள், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கையெழுத்திட்டனர்.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறவும், என்.பி.ஆர் தயாரிப்பதை நிறுத்தவும் கோரி கடந்த 2ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் திமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், இன்று (பிப்5) காலையில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட திமுக ஆதிதிராவிடர் நலக்குழு துணை அமைப்பாளரும், ஜெயராமன் - விமலா தம்பதியரின் மகனுமான ஜெயராஜூக்கும், கருணாகரன்-சகிலா மகள் தமிழரசிக்கும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அவரது இல்லத்தில் சுயமரியாதை திருமணம் நடைபெற்றது.

ஸ்டாலின் நடத்தி வைத்த இந்த திருமண வைபவத்தில் காஞ்சிபுரம் மாவட்ட திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். மேலும், இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர், மாநில மாணவரணி செயலாளர் சி.வி.எம்.பி எழிலரசன், தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், காஞ்சிபுரம் நகர செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருமண விழாவில், குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிரான கையெழுத்து இயக்கம் குறித்து, மணமக்கள் மற்றும் அவர்களது குடும்பத்தாரிடம் விளக்கி அவர்களிடம் ஸ்டாலின் கையெழுத்து பெற்றார். மணமக்கள் மற்றும் அவரது குடும்பத்தார் அனைவரும் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக கையொப்பமிட்டனர்.

You'r reading குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திமுகவின் இயக்கத்தில் கையெழுத்திட்ட மணமக்கள்.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை