தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு.. விசாரணைக்கு ஆஜராக ரஜினிக்கு ஆணையம் விலக்கு..

தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தில் ஆஜராவதிலிருந்து ரஜினிக்கு விலக்கு அளிக்கப்பட்டது.

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே22ம் தேதி நடந்த கலவரம் மற்றும் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 13 பேர் பலியானார்கள். இது தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷனை தமிழக அரசு நியமித்தது. இந்த விசாரணை கமிஷன் தூத்துக்குடியில் விசாரணை நடத்தி வருகிறது.

சம்பவம் நடந்த சில நாட்களில் பாதிக்கப்பட்ட மக்களை நடிகர் ரஜினிகாந்த் சென்று சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது, காயமடைந்து மருத்துவமனையிலிருந்த ஒருவர் ரஜினியிடம், நீங்கள் யார்? என்று வேண்டுமென்றே கேட்டார். இதனால், ஒரு கணம் தடுமாறி விட்ட ரஜினி பின்னர் சென்னை திரும்பினார்.

அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாதாரண மக்கள் இல்லை. கலெக்டர் அலுவலகம், குடியிருப்பு எரிப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் சாமானிய மக்கள் கிடையாது. நிச்சயமாக விஷக்கிருமிகள், சமூக விரோதிகள் ஊடுருவி விட்டார்கள் என்று கடுமையாக விமர்சித்தார்.

இந்நிலையில், தூத்துக்குடி சம்பவம் குறித்து அவர் பேசியதால், அவரிடம் விசாரணை நடத்துவதற்காக விசாரணை கமிஷன் சம்மன் அனுப்பியது. தூத்துக்குடியில் நடைபெறும் விசாரணைக்கு ரஜினி இன்று ஆஜராக வேண்டுமெனக் கூறப்பட்டது. ஆனால், அவர் ஆஜராகாமல் விலக்கு கேட்டு மனுத் தாக்கல் செய்தார். அவரது சார்பில் இளம்பாரதி உள்பட 3 வழக்கறிஞர்கள் ஆஜராகி, ரஜினி நேரில் ஆஜராக விலக்கு கேட்டனர். இதற்கு விசாரணை கமிஷன் அனுமதி வழங்கியது. மேலும், ரஜினிக்கான கேள்விகளை சீலிட்ட கவரில் அளிக்கப்பட்டது.

இது குறித்து விசாரணை ஆணையத்தில் ஆஜராகிய வக்கீல் இளம்பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:-
ரஜினிகாந்த் நேரில் ஆஜராகாததற்கு ஆணையத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டது. அவருக்கு நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அவரிடம் கேட்க வேண்டிய கேள்விகளை எழுத்துப் பூர்வமாக சீலிடப்பட்ட கவரில் வைத்து விசாரணை அதிகாரி கொடுத்துள்ளார்.

அந்த கேள்விகளுக்கான பதிலை ரஜினிகாந்த்திடம் பெற்று, அவரது விளக்கத்தை விசாரணை கமிஷனிடம் தாக்கல் செய்வோம்.
இவ்வாறு இளம்பாரதி தெரிவித்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
Tag Clouds