போலீஸ் பாதுகாப்பு.. ரஜினி திடீர் மறுப்பு..

ரஜினி தனது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று மறுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் துக்ளக் பத்திரிகை ஆண்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் நடத்திய பேரணியில் ராமர் படத்தைச் செருப்பால் அடித்ததாக ரஜினி பேசினார்.
பெரியார் எத்தனையோ சமூக மாற்றங்களை ஏற்படுத்திய தலைவர் என்றும், கேரள மாநிலம் வைக்கத்தில் போராட்டம் நடத்தி தாழ்த்தப்பட்டோருக்குக் கோயிலில் நுழைய அனுமதி பெற்றுத் தந்தவர் என்றும் அதையெல்லாம் விட்டுவிட்டு அவரை ரஜினி விமர்சித்தது ஏன்? என்று திராவிடர் இயக்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ரஜினி மன்னிப்பு கேட்க வலியுறுத்தினர். அதற்கு பிறகும் ரஜினி, நான் பேசியது சரிதான், மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று கூறினார்.

இதையடுத்து, திராவிடர் கழகம் உள்ளிட்ட அமைப்புகள் ரஜினி வீட்டுக்கு முன் ஆர்ப்பாட்டம் நடத்தி வந்தனர். இதனால், போயஸ் கார்டனில் உள்ள ரஜினி வீட்டுக்கு வெளியே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. தொடர்ந்து அந்த பாதுகாப்பு நீடித்து வருகிறது.

தற்போது அந்த பாதுகாப்பை நீட்டிப்பது தொடர்பாக ரஜினியிடம் கருத்துக் கேட்பதற்காக காவல்துறை நுண்ணறிவு பிரிவு(உளவுபிரிவு) துணை ஆணையர் திருநாவுக்கரசு சென்றார். அவர் ரஜினியைச் சந்தித்து இது பற்றிப் பேசினார். அப்போது தனது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை என்று ரஜினி கூறியதாகத் தெரிகிறது.

இதையடுத்து, காவல்துறை உயரதிகாரிகளுடன் ஆலோசித்த பிறகு, அந்த போலீஸ் பாதுகாப்பை வாபஸ் பெறுவது குறித்து முடிவெடுப்பதாக துணை ஆணையர் திருநாவுக்கரசு, ரஜினியிடம் கூறியிருக்கிறார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
remdesivir-sold-for-rs-1-8-crore-in-chennai-kelambakkam-center
உயிரை காக்க சென்னை கீழ்பாக்கத்தில் குவியும் மக்கள்! ஐந்தே நாட்களில் ரூ.1.88 கோடி!
17-year-old-girl-was-raped-by-many-for-2-years-like-pollachi-sexual-harassment-case
2 ஆண்டுகளாக சிறுமியை கற்பழித்த 3 பேர்… தாம்பரத்தில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்…
corona-virus-150-districts-across-india-might-met-full-lockdown
சென்னை உட்பட நாடு முழுவதும் 150 மாவட்டங்களில் முழு ஊரடங்கு?
non-loan-insurance-company-employe-abduction-police-looking-for-kidnappers
லோன் கொடுக்க மறுத்த இன்சூரன்ஸ் கம்பெனி ஊழியர் கடத்தல்
night-curfew-lasts-for-2-days-deserted-chennai
2 வது நாள் இரவு ஊரடங்கு - வெறிச்சோடிய சென்னை
all-chennai-local-train-service-after-10pm-cancelled
சென்னையில் மின்சார ரயில் இரவு 10 மணிக்கு மேல் ரத்து
a-girl-molested-by-church-paster-in-chennai
ஜெபம் செய்ய வந்த பெண்ணை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்த மதபோதகர்.. அதிர்ச்சியில் பக்தர்கள்!
Tag Clouds