தமிழகத்தில் 31 குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு..

தமிழகத்தில் 10 வயதுக்கு உட்பட்ட 31 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் நிருபர்களிடம் கூறியதாவது:-தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 98 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டது. இதில் 91 பேர், டெல்லி மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் எனத் தெரிய வந்துள்ளது. 4 பேர் ஏற்கனவே கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் டாக்டர்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் 4 பேர். கொரோனாவுக்கு இதுவரை 11 பேர் உயிரிழந்துள்ளனர். 58 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 10 வயதுக்கு உட்பட்ட 31 குழந்தைகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


சென்னையைச் சேர்ந்த டாக்டருக்கு ஆந்திராவில் இருக்கும் போது கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். அவரது உடலை அம்பத்தூர் மின் மயானத்தில் தகனம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டு, அதை உடனடியாக மாநகராட்சி கமிஷனர் மூலம் சமாளித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோல் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதில் பிரச்சனை வராமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

நாம் 4 லட்சம் துரிதப் பரிசோதனை கருவிகள் (ரேபிட் டெஸ்டிங் கிட்) வாங்குவதற்கு ஆர்டர் செய்திருந்தோம். தற்போது அவை வந்து சேர தாமதமாகிறது. அதற்காக நாம் காத்திருக்கவில்லை. கொரோனா பாதிப்பு அறிகுறி உள்ளவர்கள், அதிக மூச்சுத்திணறலால் பாதிக்கப்படுவோர், கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் உள்ள அனைவருக்கும் பி.சி.ஆர். பரிசோதனைகளையே செய்து வருகிறோம்.
கொரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds