தமிழகத்தில் 6535 பேருக்கு கொரோனா.. பலி 45 ஆக அதிகரிப்பு

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 6535 ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்ததை அடுத்து, பலி எண்ணிக்கை 45 ஆனது.தமிழகத்தில் கொரோனா பரவுவது இன்னும் கட்டுப்படவில்லை. தினமும் புதிதாக 400, 500 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 526 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் 360 பேர் ஆண்கள். 166 பேர் பெண்கள். இவர்களுடன் சேர்த்து கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 6535 ஆக உயர்ந்துள்ளது. நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 219 பேரையும் சேர்த்து 1824 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் இன்று 12,999 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இது வரை 2 லட்சத்து 19,406 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது.

தமிழகம் முழுவதும் நேற்று வரை 44 உயிரிழந்திருந்தனர். இன்று காலையில் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 58 வயது கொரோனா நோயாளி உயிரிழந்தார். இதையடுத்து, கொரோனா பலி எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது.
சென்னையில் நேற்று ஒரே நாளில் புதிதாக 279 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சென்னையில் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 3330 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தவிர, செங்கல்பட்டில் 40 பேர், கடலூர் 3, பெரம்பலூர் 31, திருவள்ளூர் 26, நெல்லை 8, திருவண்ணாமலை 15, ராணிப்பேட்டை 10, அரியலூர் 16, தேனி 2, ராமநாதபுரம் 2, திண்டுக்கல், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, நாமக்கல், நீலகிரி, தஞ்சாவூர் மற்றும் திருச்சி தலா ஒருவருக்கு கொரோனா பாதித்துள்ளது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து சரக்கு வாகனங்களில் சென்ற தொழிலாளர்கள் மூலம்தான் அரியலூர், கடலூர், பெரம்பலூர், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் அதிகமானோருக்கு கொரோனா பரவியிருக்கிறது. தற்போது கோயம்பேடு மார்க்கெட், திருமழிசைக்கு மாற்றப்பட்டு, சமூக இடைவெளி பின்பற்றப்பட்டு வருகிறது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
Tag Clouds