ரஜினிக்கு கிடைத்தது எங்களுக்கு கிடைக்கவில்லை - தமிழிசை வேதனை

ரஜினிக்கு கிடைக்கும் விளம்பரம் வேண்டுமானால் எங்களுக்கு கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், அவருடைய கருத்துக்களை தான்,நாங்களும் சொல்கிறோம் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Mar 6, 2018, 10:59 AM IST

ரஜினிக்கு கிடைக்கும் விளம்பரம் வேண்டுமானால் எங்களுக்கு கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், அவருடைய கருத்துக்களை தான்,நாங்களும் சொல்கிறோம் என்று பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

முன்னதாக வேலப்பன்சாவடியில் உள்ள ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த், “நான் என் வேலையை ஒழுங்காக செய்து கொண்டிருந்தேன். ஒரு நடிகனாக சரியாக பணி செய்து கொண்டிருந்தேன். ஆனால், நீங்கள் [அரசியல் கட்சிகள்] உங்கள் வேலையைச் சரியாக செய்யவில்லை” என்று கூறியிருந்தார்.

இது குறித்த கேள்விக்கு பதிலளித்து பேசிய தமிழிசை சவுந்தரராஜன், “மக்களை சார்ந்து தான் அரசியல் என்பதை ரஜினிகாந்த் உணர்ந்துள்ளார். அரசியல் கட்சி தலைவர்கள் சரியாக செயல்படவில்லை என்று ரஜினி கூறுவதை நான் ஏற்கவில்லை.

ஏனென்றால் ஒவ்வொரு பிரச்னையையும் வெவ்வேறு விதமாக அணுக வேண்டியுள்ளது. ரஜினிக்கு கிடைக்கும் விளம்பரம் வேண்டுமானால் எங்களுக்கு கிடைக்காமல் இருக்கலாம். ஆனால், அவருடைய கருத்துக்களை தான், நாங்களும் மக்களிடம் எடுத்துச் சொல்கிறோம்.

மேலும், புதிதாக கட்சி தொடங்குவோர் தெளிவாக நடைபோடட்டும். பின்னர் மக்கள் எடை போடுவார்கள். தமிழகத்தில் மாற்று சக்தியாக வருவோம் என்று நாங்கள் சொல்கிறோம். யாரை ஆதரிப்பது என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் அதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

You'r reading ரஜினிக்கு கிடைத்தது எங்களுக்கு கிடைக்கவில்லை - தமிழிசை வேதனை Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை