வெளிமாநிலத்தில் இருந்து வந்த 99 பேருக்கு கொரோனா.. தமிழக பாதிப்பு 10,585..

மகாராஷ்டிரா உள்பட வெளிமாநிலங்களில் தமிழகத்திற்கு வந்த 93 பேர் உள்பட 477 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதனால், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 10,585 ஆக உயர்ந்தது.இந்தியாவில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமாகப் பரவியிருக்கிறது. ஆரம்பத்தில் டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டிலிருந்து வந்தவர்களுக்கு கொரோனா பரவியிருந்தது. அடுத்ததாக, கோயம்பேடு மார்க்கெட் ஒரு கொரோனா ஹாட்ஸ்பாட் ஆக மாறி, அங்கிருந்து திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பல ஆயிரம் பேருக்கு நோய் பரவியது. அது கட்டுக்குள் வரும் நிலையில், தற்போது வெளிமாநிலங்களிலிருந்து கொரோனா பாதிப்பு வரத் தொடங்கியிருக்கிறது.


தமிழகத்தில் கொரோனா பாதிப்பின் நேற்றைய நிலவரம் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:தமிழகத்தில் புதிதாக 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 384 பேருக்கும், வெளிமாநிலத்திலிருந்து வந்த 93 பேருக்கு மொத்தம் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வங்கதேசத்தின் டாக்காவிலிருந்து வந்த 4 பேர், மகாராஷ்டிரா 81, குஜராத் 7, ஆந்திரா 1 என்று 93 பேருக்கு கொரோனா பாதித்திருக்கிறது.
மாநிலம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10.585 ஆக அதிகரித்துள்ளது. இதில் நேற்று பலியான 3 பேருடன் சேர்த்து உயிரிழப்பு 74 ஆனது. நேற்று டிஸ்சார்ஜ் ஆன 939 பேருடன் சேர்த்து 3538 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 6970 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது வரை 2 லட்சத்து 99,176 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று 332 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், மொத்த பாதிப்பு 6271 ஆக உயர்ந்துள்ளது. அரியலூர் 348 பேர், செங்கல்பட்டு 470, கடலூர் 416, திருவள்ளூர் 527, காஞ்சிபுரம் 180, திருநெல்வேலி 180 பேர் என்று இந்த மாவட்டங்களில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds