பிளஸ் 2 தேர்வு முடிவு.. ஜூலையில் வெளியாகும்.. செங்கோட்டையன் தகவல்

plus 2 public exam results release in july.

by எஸ். எம். கணபதி, May 30, 2020, 14:37 PM IST

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் ஜூலை மாதத்தில் வெளியாகும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.ஈரோடு மாவட்டம், கோபிச் செட்டிப்பாளையத்தில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன், நிருபர்களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:10ம் வகுப்பு தேர்வு அறிவித்தபடி நடைபெறும். மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளியிலேயே தேர்வு எழுதலாம். பிளஸ் 2 தேர்வு, 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வரும் ஜூலை மாதத்தில் வெளியாகும். ஆன்லைன் மூலம் கல்வி கற்பிப்பதற்கு எந்த தடையும் இல்லை. தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் கட்டணம் வசூலிப்பதைத்தான் நிறுத்தச் சொன்னோம். பள்ளிகளைத் திறப்பது குறித்து இது வரை முடிவெடுக்கவில்லை.
இவ்வாறு செங்கோட்டையன் தெரிவித்தார்.

You'r reading பிளஸ் 2 தேர்வு முடிவு.. ஜூலையில் வெளியாகும்.. செங்கோட்டையன் தகவல் Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை