சென்னையில் கொரோனா பாதிப்பு 13,980 ஆக உயர்வு..

covid19 cases in tamilnadu crosses to 21,184

by எஸ். எம். கணபதி, May 31, 2020, 10:02 AM IST

தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 938 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதில் சென்னையில் மட்டும் 616 பேருக்கு நோய்ப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் தினமும் புதிதாக 700, 800 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. நேற்று(மே30) மட்டும் புதிதாக 938 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது.

இதில், வெளிமாநிலங்களிலிருந்து வந்த 82 பேர் அடக்கம். மகாராஷ்டிராவிலிருந்து வந்த 46 பேர், குஜராத்திலிருந்து வந்த 7 பேர், மேற்கு வங்கத்திலிருந்து வந்த 12 பேர், குவைத், டெல்லியிலிருந்து தலா 3 பேர், உ.பி, ஜார்கண்ட், கர்நாடகாவிலிருந்து தலா 2 பேர், ஆந்திரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஒருவர் என்று கொரோனா கண்டறியப்பட்டது.

தற்போது, தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 21,184 ஆக அதிகரித்துள்ளது. இதில் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 687 பேரையும் சேர்த்து மொத்தம் 12,000 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனாவுக்கு நேற்று 6 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 160 ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் நேற்று ஒரே நாளில் 616 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 13,980 ஆக அதிகரித்துள்ளது.சென்னை தவிர, செங்கல்பட்டில் 94 பேருக்கும் காஞ்சிபுரத்தில் 22 பேருக்கும், கடலூரில் 5 பேருக்கும், மதுரையில் 10 பேருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

You'r reading சென்னையில் கொரோனா பாதிப்பு 13,980 ஆக உயர்வு.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை