தமிழகத்தில் கொரோனா பலி 307 ஆக அதிகரிப்பு.. 35 ஆயிரம் பேருக்கு பாதிப்பு..

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 34,914 ஆக அதிகரித்துள்ளது. இந்நோயால் பலியானவர்களின் எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது.இந்தியாவில் ஊரடங்கு முழுமையாகத் தளர்த்தப்பட்டு வரும் நிலையில், கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. தினமும் 10 ஆயிரம் பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்படுகிறது. தமிழகத்திலும் கடந்த சில நாட்களாகத் தினமும் புதிதாக 1000 பேருக்கு மேல் கொரோனா தொற்று பரவி வருகிறது. நேற்று ஒரே நாளில் 1649 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில், வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவை 36 பேரும் அடக்கம்.


தம்மம் 1, குவைத் 3, மாலத்தீவு 1, ஆந்திரா 2, உ.பி. 1, அசாம் 1, டெல்லி 2, மகாராஷ்டிரா 6, கர்நாடகா 3 என்று வெளிநாடு, வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.தமிழகத்தில் தற்போது 34,914 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது. கொரோனாவுக்கு நேற்று 21 பேர் உயிரிழந்ததை அடுத்துப் பலி எண்ணிக்கை 307 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் நேற்று 12,421 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. மொத்தத்தில் இது வரையில் 5 லட்சத்து 93189 பேருக்குப் பரிசோதனை செய்யப்பட்டிருக்கிறது. சென்னையில் நேற்று 1242 பேருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது சென்னையில் மட்டும் நோய் பாதித்தவர் எண்ணிக்கை 24,545 ஆக அதிகரித்துள்ளது.

செங்கல்பட்டில் நேற்று 158 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2146 ஆக உள்ளது. இதே போல், திருவள்ளூரில் 1476 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 567 பேருக்கும், திருவண்ணாமலையில் 522 பேருக்கும் கொரோனா பரவியிருக்கிறது. மற்ற மாவட்டங்களில் 500க்கும் குறைவானவர்களுக்கு நோய் பரவியிருக்கிறது. தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருப்பத்தூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டுமே 100க்கும் குறைவானவர்களுக்கு நோய் பாதித்துள்ளது.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds