எல்லாத்துக்கும் போலீஸாரையே குறை சொல்லக்கூடாது: கடிந்துகொண்ட நீதிமன்றம்!
"எல்லாப் பிரச்னைகளுக்கும் போலீஸாரை மட்டும் எப்போதும் குறை சொல்லிக்கொண்டே இருக்கக்கூடாது" என சென்னை உயர்நீதிமன்றம் கடிந்துகொண்டுள்ளது.
சமீபகாலமாக போக்குவரத்து விதிமுறை மீறல்களால் பொதுமக்களுள் பலர் பாதிக்கப்படுவதும் அதற்குக் காவல்துறையினரே காரணம் என எதிர்ப்புகளும் போராட்டங்களும் போலீஸாருக்கு எதிராக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இது தொடர்பான பொதுநல வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்குத் தொடர்ந்து வந்த வண்ணம் உள்ளன.
இந்த வரிசையில் சமீபத்தில் நடந்த ஒரு வழக்கு விசாரணையில் சென்னை உயர் நீதிமன்றம் பொதுமக்களைக் கடிந்துகொண்டுள்ளது. விசாரணை நீதிபதி கூறுகையில், "சாலைப் போக்குவரத்து மட்டுமல்லாமல் பல இடங்களிலும் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள், விபரீதங்களுக்கு மக்களின் விதிமீறல்களும்தான் காரணம். எல்லா விபத்துகளுக்கும் போலீஸாரை மட்டும் குறை கூறுவது நியாயமாகது" என்றுள்ளார்.
You'r reading எல்லாத்துக்கும் போலீஸாரையே குறை சொல்லக்கூடாது: கடிந்துகொண்ட நீதிமன்றம்! Originally posted on The Subeditor Tamil
More Tamilnadu News