தியாகிகள் ஓய்வூதியம் ரூ17 ஆயிரமாக உயர்வு.. சுதந்திரதின உரையில் முதல்வர் அறிவிப்பு..

சுதந்திரத் போராட்ட தியாகிகளுக்குத் தமிழக அரசு அளிக்கும் ஓய்வூதியம் ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அரசின் சார்பில் இன்று காலை 8.30 மணிக்கு 74வது சுதந்திரதின விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு வந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்குத் தலைமைச் செயலாளர் சண்முகம் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். பின்னர், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டார்.

இதைத் தொடர்ந்து, கோட்டை கொத்தளத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தேசியக் கொடி ஏற்றி வைத்தார். அதன்பின், சுதந்திர தின உரையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்ட முக்கிய அம்சங்கள் வருமாறு:கொரோனா காலத்தில் மக்களுக்காகக் களப் பணியாற்றிய அனைத்து அரசுத் துறை ஊழியர்களுக்கும் பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில்தான் கொரோனாவால் உயிரிழப்போர் விகிதம் மிகவும் குறைவாக உள்ளது. கொரோனா நிவாரணப் பணிகளுக்காகத் தமிழக அரசு நிதியிலிருந்து ரூ.6650 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது. வந்தே பாரத், சமுத்திரசேது திட்டத்தின் கீழ் 64,661 பேர் தமிழகம் திரும்பி வந்துள்ளனர்.

சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்குத் தமிழக அரசு அளிக்கும் ஓய்வூதியம் ரூ.16 ஆயிரத்தில் இருந்து ரூ.17 ஆயிரமாக உயர்த்தப்படும். தமிழகத்தில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.இந்த ஆண்டு மேட்டூர் அணை ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டதால், உரியக் காலத்தில் விவசாயப் பணிகள் தொடங்கியுள்ளன. குறிப்பாக, தூர்வாரும் பணிகள் முன்கூட்டியே நடந்து முடிந்துள்ளதால், கடைமடைப் பகுதிகளுக்கு வழக்கத்தை விட 10 நாட்களுக்கு முன்பாக தண்ணீர் கிடைத்துள்ளது. இதனால், குறுவைப் பாசனத்திற்கு உதவியாக உள்ளது. மேலும், ரூ.1432 கோடி செலவில் 6278 நீர்நிலைகள் சீரமைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
actress-mahalakshmi-s-husband-ravinder-is-in-trouble-again
சிக்கிய பென் டிரைவ்,ஆவணங்கள்... நடிகை மகாலட்சுமியின் கணவர் ரவீந்தருக்கு மீண்டும் சிக்கல்
he-broke-his-promise-so-we-broke-up-ramarajan-open-talk-on-nalini
சத்தியம் செய்ததை மீறினார்... அதனால் பிரிந்தோம்- நளினி குறித்து ராமராஜன் ஓபன் டாக்
hospital-built-by-napoleon-grandfather-greeted-the-boy
நெப்போலியன் கட்டிய மருத்துவமனை... நீ நடப்பாய் சிறுவனை வாழ்த்திய பெரியதம்பி தாத்தா.... வாக்கு பலித்த அதிசயம்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
Tag Clouds

READ MORE ABOUT :