`2ம் தலைநகர் கருத்து அரசின் கருத்தல்ல! -சர்ச்சைக்கு முதல்வரின் முற்றுப்புள்ளி

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தென்மாநில சுற்றுப்பயணத்தின்போது மதுரை மேற்கு தொகுதி அதிமுக நிர்வாகிகள் முதல்வரிடம் மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அமைச்சர் ஆர்பி உதயகுமாரோ தனது பேட்டியில், ``மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவிக்க வேண்டும். மதுரையை இரண்டாவது தலைநகராக அறிவித்தால் அதிக வளர்ச்சியை கொடுக்கும். தென் மாநிலங்கள் வேகமாக வளரும். தென்னகத்தில் படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் மக்களின் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்" என பேசினார்.

உதயகுமாரின் கோரிக்கைக்கு, செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா என தென் மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகிகள் தோள் கொடுக்க கோரிக்கை வலுப்பெற்றது. ஆனால் திருச்சி அமைச்சரான சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜனோ, ``திருச்சியை இரண்டாவது தலைநகரமாக உருவாக்க வேண்டும் என்பது எம்ஜிஆரின் நீண்ட நாள் கனவு. தேசிய அளவிலான ரயில் நிலையம், சர்வதேச விமான நிலையம், தடையில்லாத குடிநீர், மத்திய, மாநில அரசு நடத்தும் தொழிற்சாலைகள் என அனைத்தும் கொண்ட மாவட்டம் திருச்சி. சென்னைக்கு அடுத்தபடியாக இரண்டாவது துணை நகரமாக உருவாக்குவதற்கு ஏற்றது திருச்சி என்று மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் ஆசை கொண்டிருந்தார். எனவே, தற்போது திருச்சி இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க முதல்வர் துணை முதல்வர் முன்வர வேண்டும்" என்று தெரிவித்தார்.

இப்படி ஆளாளுக்கு தங்கள் மாவட்டத்தை இரண்டாம் தலைநகராக அறிவிக்க வேண்டும் என போர்க்கொடி தூங்கியதால், அதிமுகவுக்குள் சலசலப்பு எழுந்தது. இந்நிலையில், இன்று முதல்வர் பழனிசாமியோ, ``2ம் தலைநகர் கருத்து அரசின் கருத்தல்ல; அவரவர் கருத்து" என்று அதிரடியாக கூறி சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

எங்களுடைய தமிழ் செய்திகளை உங்கள் மெயில் இன்பாக்சில் பெறுவதற்கு இங்கே உங்கள் மெயில் ஐடியை பதிவு செய்யவும் : Tamil news RSS

OR You can install Google News on Android or iOS, and then access our edition https://news.google.com/publications/CAAqBwgKMP_rkQsw3YOnAw?oc=3&ceid=IN:ta through the app.

Advertisement
மேலும் செய்திகள்
prime-minister-light-house-plan-chennai
பிரதமரின் அனைவருக்கும் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் லைட் ஹவுஸ் திட்டம்
singarach-chennai-2-0-football-ground-laid-foundation
“சிங்காரச் சென்னை 2.0” செயற்கை புல் கால்பந்து மைதானம்
new-restriction-imposed-from-tomorrow
இதெல்லாம் நாளை இருக்காது தெரியுமா? – புதிய கட்டுப்பாடுகள் என்ன?
stalin-request-to-private-hospitals
மக்களை காக்க தனியார் மருத்துவமனைகள் முன்வரவேண்டும் – ஸ்டாலின் வலியுறுத்தல்
high-court-judge-advice-to-dmk
ஏன் இப்படி செய்கிறார்கள்? - திமுகவினருக்கு அறிவுறுத்திய சென்னை உயர்நீதிமன்றம நீதிபதி
local-trains-doesn-t-function-from-tomorrow
புறநகர் ரயில்களில் அனுமதியில்லை – தெற்கு ரயில்வே அறிவிப்பு!
eps-and-ops-fight-for-opposition-assembly-leader-post
எதிர்கட்சித்தலைவர் யார் – அதிமுகவில் முட்டி மோதும் ஓ.பி.எஸ் – இ.பி.எஸ்!
the-boy-who-spent-rs-12-lakh-on-an-online-game
ஒரு வருடத்தில் அப்பாவின் ரூ.12 லட்சம் செலவு – போலீசில் சிக்கிய சிறுவன்… என்ன நடந்தது தெரியுமா…?
stalin-going-to-take-oath-on-friday
ஆட்சி அமைக்க உரிமை கோரினார் ஸ்டாலின் – நாளை மறுநாள் பதவி ஏற்பு!
elder-brother-who-killed-younger-brother-in-family-dispute
தம்பியை கொன்ற அண்ணன் – அதிர்ச்சி காரணம்…!
Tag Clouds

READ MORE ABOUT :