தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை எட்டுகிறது..

corona cases in tamilnadu nearing 4 lakhs.

by எஸ். எம். கணபதி, Aug 24, 2020, 09:03 AM IST

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இன்னும் நான்கைந்து நாட்களில் 4 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 3.8 லட்சம் பேருக்கு நோய் பாதித்திருக்கிறது.மாநிலம் முழுவதும் தினமும் சுமார் 6 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. நேற்று(ஆக.23) 5975 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. இதில் 33 பேர் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள். நேற்று மாலை நிலவரப்படி தமிழகம் முழுவதும் 3 லட்சத்து 79,385 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன 6047 பேரையும் சேர்த்தால், இது வரை 3 லட்சத்து 19,327 பேர் குணம் அடைந்துள்ளனர். நோய்ப் பாதிப்பால் நேற்று 97 பேர் பலியானார்கள். இவர்களுடன் சேர்த்து இது வரை 6517 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 53,541 பேர் சிகிச்சையில் உள்ளனர். சென்னையில் தொடர்ந்து தினமும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களுக்குத் தொற்று கண்டுபிடிக்கப்பட்டு வருகிறது. நேற்று 1298 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. சென்னையில் மொத்தம் ஒரு லட்சத்து 25.389 பேருக்கு கொரோனா தொற்று பாதித்திருக்கிறது.செங்கல்பட்டில் நேற்று 352 பேருக்கும், காஞ்சிபுரம் 222, மதுரை 102, திருவள்ளூர் 354பேருக்கும் தொற்று கண்டறியப்பட்டது.

செங்கல்பட்டில் இது வரை 23,498 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 15,514 பேருக்கும் கொரோனா தொற்று பாதித்திருக்கிறது. மதுரையில் கொரோனா பாதித்தவர் எண்ணிக்கை 13,433 ஆக அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் பாதிப்பு 22,453 ஆக உயர்ந்துள்ளது. தூத்துக்குடியில் 10,635 பேர், விருதுநகரில் 11,895 பேருக்குத் தொற்று பாதித்திருக்கிறது. கோவை, வேலூர், திருவண்ணாமலை, தேனி, ராணிப்பேட்டை, திருநெல்வேலி, கடலூர், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் தொற்று பாதித்தவர் எண்ணிக்கை 8 ஆயிரத்தைத் தாண்டியிருக்கிறது.

You'r reading தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 4 லட்சத்தை எட்டுகிறது.. Originally posted on The Subeditor Tamil

More Tamilnadu News


அண்மைய செய்திகள்

அதிகம் படித்தவை